ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், வீட்டின் சின்னச் சின்னக் கஷ்டங்கள் கூட, காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்.
ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், வீட்டின் சின்னச் சின்னக் கஷ்டங்கள் கூட, காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்.
அம்பாளுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில், சிவாலயங்களில் துர்கை அம்மன் கோஷ்ட தேவதையாகக் காட்சி தருவாள். அதேபோல், அம்மன் கோயில்களில், துர்காதேவி கோஷ்டத்திலும் இருப்பாள். சில கோயில்களில் தனிச்சந்நிதியாகவும் வீற்றிருப்பாள்.
எனவே எந்த அம்மனாக இருந்தாலும், செவ்வாய்க்கிழமையான இன்று ராகுகால வேளையில், அதாவது மாலை 3 முதல் 4.30 மணி வரையிலான ராகுகாலத்தில், ஆலயம் சென்று, தேவியை மனதாரப் பிரார்த்தனை செய்து, எலுமிச்சை தீபமேற்றினால் துன்பங்கள் பறந்தோடும். இந்த நாட்களில் செந்நிற மலர்களை அம்மனுக்குச் சாத்துவது மிகவும் நல்லது.
வீட்டின் கஷ்டங்களும் துக்கங்களும் பறந்தோட ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.
No comments:
Post a Comment