
சிருங்கேரியில் சங்கரருக்கு கிரி என்ற சீடர் இருந்தார். தனது பெயருக்கேற்றாற் போல், கேள்வி கேட்பதோ, விவாதம் செய்வதோ இல்லாமல் கிரியாகவே(மலையாகவே) ஆடாமல், அசையாமல் பாடம் கேட்பார். சங்கரர் மீது அபார பக்தி கொண்டவர். நேரத்தை எல்லாம் குருசேவைக்கே அர்ப்பணித்து வந்தார். ஒருநாள் சங்கரரின் துணிகளைத் துவைக்கச் சென்றார். கிரி வந்தவுடன் பாடம் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் சங்கரர் காத்திருந்தார். சீடர்கள் அவரிடம், ""குருவே! கிரிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கிருக்கும் சுவரும் கிரியும் ஒன்று தான்,'' என்று சொல்லிச் சிரித்தனர். இதைக்கேட்ட சங்கரர், கிரியை அப்@பா@த பண்டிதனாக மாற்றுவதற்காக தியானத்தில் ஆழ்ந்தார். துணி துவைத்த கிரிக்கு கணப்பொழுதில் ஞானம் உண்டானது. உபநிஷதக் கருத்துக்கள் அடங்கிய பாடல் ஒன்றை "தோடக' ராகத்தில் பாடியபடியே மடத்தை நோக்கி வந்தார். அப்பாடலுக்கு "தோடகாஷ்டகம்' என்றும், கிரிக்கு "தோடாகாச்சாரியார்' என்றும் பெயரிட்டு சங்கரர் மகிழ்ந்தார். திறமை வேண்டுமென்பதில்லை, தெரிந்த வேலையை சரியாகச் செய்தாலே நிறைந்த பலன் கிடைத்துவிடும் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment