
இளஞ்சூரியன் நீலக்கடலில் இருந்து தினமும் எழுகிறான். இக்காட்சியைக் காணும் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில், முருகனே சூரியனாக எழுந்தருள்வதாகக் குறிப்பிடுகிறார். கடல் மயில் வாகனம். அதன் நீலவண்ணம் தோகை. அதில் வரும் சூரியன் செக்கச் சிவந்தவனான முருகன். சூரியஒளி பரவியதும் உலக இருள் மறைகிறது. அதுபோல முருகனின் அருளால் அறியாமை இருள் மறைந்து ஞானஒளி எங்கும் பரவுகிறது என்று அவர் வர்ணிக்கிறார்.
No comments:
Post a Comment