
பாரதப்போரில் காயமடைந்து அம்புப்படுக்கையில் கிடந்த பீஷ்மரிடம், சித்ரபானு என்ற மன்னன் தன் முற்பிறவிக்கதையைக் கூறினான். முற்பிறவியில் அவன் பெயர் சுச்வரன். "இனிய குரலைக் கொண்டவன்' என்பது இதன் பொருள். ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது விலங்கேதும் சிக்கவில்லை. பசியால் வாடிய அவன், இரவில் ஒரு வில்வ மரத்தடியில் தங்கினான். தூக்கம் வராததால் மரத்தின் மீதேறி இலைகளை பறித்து பொழுது போக்கினான். அந்த இலைகள் கீழிருந்த லிங்கம் மீது விழ வில்வ அர்ச்சனையாக அமைந்தது. அந்த புண்ணியத்தால் மன்னராகப் பிறக்கும் பேறு பெற்றதாக கூறினான்.
No comments:
Post a Comment