வெங்கடேசப் பெருமாளுக்கு தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கும். இந்த சேவையில் வேங்கடேச சுப்ரபாதம், ஸ்தோத்திரம், பிரபத்தி, மங்களாசாசனம் ஆகியவற்றை தாளபாக்க அன்னமாச்சார்யா வம்சத்தினர் பாடுவர். அதன் பின் கீர்த்தனைகள் பாடப்படும். பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவரால் எழுதப்பட்ட சுப்ரபாதம் கேட்டே, பெருமாள் துயிலில் எழுந்தருள்கிறார். அப்போது பெருமாளுக்கு பசும்பால், வெண்ணெய், சர்க்கரை கலந்த நைவேத்யம் படைத்து தீபாராதனை நடத்தப்படும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர்.
Tuesday, 13 February 2018
சுப்ரபாதம் எழுதியது யார் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment