
பால், பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
வஸ்திரம், சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்து சாம்பிராணி அல்லது ஊதுபத்தி காட்ட வேண்டும்.
தனியாக சாதம் வடித்து அதில் சிறிது நெய், பருப்பு சேர்த்து பிரசாதம் செய்ய வேண்டும். பிறகு கற்பூரம் காட்ட வேண்டும்.
அந்தந்த தெய்வத்திற்குரிய தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். இம்முறையில் பூஜை செய்வது சிறப்பு.
பஞ்சலோக விக்ரஹமாக இருந்தால் எண்ணெய் சாத்தவேண்டாம்.
விக்ரஹங்கள் 5" அல்லது 6" மேல் இருக்க கூடாது.
இந்த வழிமுறைகளின்படி வீட்டிலேயே விக்ரகங்களை வைத்து வழிபட்டால் குடும்பம் தழைத்து, அனைத்து செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழலாம்.
No comments:
Post a Comment