
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அவதரித்தவள் லட்சுமி. ஐராவதம் என்னும் யானையும் அவளுடன் வந்தது. அதனால், யானையுடன் இருக்கும் கஜலட்சுமியை வழிபடுவதை சிறப்பானதாக கருதுவர். லட்சுமி நடுவிருக்க, இரு யானைகள் கும்பத்தை ஏந்தியபடி காட்சி தருபவளே "கஜலட்சுமி". கோயில் கருவறையின் நிலையின் மேற்பகுதியில் கஜலட்சுமியை செதுக்கியிருப்பர். இதை எல்லா பெரிய கோயில்களிலும் பார்க்கலாம். யானையின் முன் நெற்றியான மத்தகத்தில், லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.
No comments:
Post a Comment