Sunday 30 September 2018

கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவில் - சேலம்

கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவில் - சேலம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் கோவில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு செல்லும் முன்பு சாலையோரம் அலங்கார நுழைவு வாசல் உள்ளது. அதை கடந்து செல்லும் போது இடதுபுறம் விநாயகர் காட்சி அளிக்கிறார். அவரை வணங்கி விட்டு கோவிலுக்குள் சென்றால் சித்தேசுவரரை தரிசனம் செய்யலாம்.

தல வரலாறு :

முன் காலத்தில் கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. இதை அறிந்த மூலர் (திருமூலர்) என்ற யோகி, வயது மூப்பும், மரணமும் இல்லாத நன்மையை அளிக்கக்கூடிய மூலிகையை தேடி அங்கு வந்துள்ளார். அப்போது அவர் மலைப் பகுதியில் மூலிகையை தேடி செல்லும் போது, அவருக்கு உதவ, தன்னை விட வயது மூத்தவரும், அதே பகுதியை சேர்ந்தவருமான ஒருவரை சீடனாக ஏற்றார். அவரது இயற்பெயர் கஞ்சமலை காலாங்கிநாதர்.

மூலரும், காலாங்கிநாதரும் மலை அடிவார பகுதியில் குடில் அமைத்து வசித்து வந்தனர். தினமும் காலையில் மூலிகையை தேடி சென்று விடுவார் மூலர். அவருக்கு தேவையான உணவை அவரது சீடரான காலாங்கி நாதர் சமைத்து வைப்பார். இந்த நிலையில் காலாங்கிநாதர் ஒரு நாள், உணவு சமைத்து கொண்டிருந்த போது, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். இதனால் உணவு பொங்கி வந்தது. உடனே அருகில் இருந்த கரண்டியை தேடினார். கரண்டி கிடக்காததால், பக்கத்தில் இருந்த ஒரு செடியை பிடிங்கி, அதன் வேர் பகுதியை பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரில் கழுவி விட்டு, உணவை கிண்டி உள்ளார். சில நொடிகளில் அந்த உணவு கருப்பாக மாறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அந்த வேரை, நெருப்பில் போட்டு விட்டார்.

மேலும் கருப்பாக மாறிய உணவை தனது குருநாதருக்கு கொடுக்க முடியாது என்பதால், அதனை அவரே சாப்பிட்டு விட்டு, சமையல் செய்த பாத்திரத்தை கழுவி, அதில் புதிதாக உணவு சமைத்தார். இதனிடையே மூலிகையை தேடி சென்ற மூலர் வந்தார்.

அப்போது அங்கிருந்த நபரை கண்ட அவர், ‘தாங்கள் யார்?’ என்று வினவினார். அதற்கு காலாங்கி நாதர், ‘நான் தான் உங்களது சீடன். என்னை அடையாளம் தெரியவில்லையா?’ என்றார்.

உடனே அதற்கு மூலர், ‘நீ எப்படி இவ்வளவு இளமையாக மாறினாய்? நடந்ததை கூறு.’ என்றார்.

இதையடுத்து நடந்த அனைத்தையும் கூறினார் காலாங்கிநாதர்.

அதற்கு மூலர், ‘நான் தேடி வந்த மூலிகையே அதுதான். அது எங்கே?’ என்று கேட்டுள்ளார். மேலும் அதனை கழுவிய தண்ணீரை கேட்டார். அந்தத் தண்ணீரைக் குடித்ததன் மூலம் மூலரும் இளமையான தோற்றத்துக்கு மாறினார் என்கிறது வரலாறு.

இளமை திரும்பிய மூலர், அங்கிருந்து புறப்படத் தயாரானார். அப்போது தன்னுடன் வருவதாக கூறிய காலாங்கிநாதரிடம், ‘நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்று கூறி விட்டு, சென்றார்.

குருவின் ஆலோசனையை தட்டிக்கழிக்காத காலாங்கிநாதர், அங்கேயே இருக்க முடிவு செய்தார். ஆனால் வயதான தோற்றத்தில் இருந்த தான், இளம் வயதுக்கு உருமாறியதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து, ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றினார்.

அதன்படி அந்த பகுதியில் மாடு மேய்க்க வரும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். அப்போது ஒரு மாட்டின் பாலை மட்டும் தொடர்ந்து குடித்து வந்தார். பின்னர் தன்னுடன் விளையாடும் சிறுவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பிவிடுவார். இதனால் அவர்கள் நடந்ததை மறந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள்.

இந்த நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் அனைத்து மாடுகளும் பால் அதிகமாக கறக்கும் போது, ஒரு மாடு மட்டும் பால் தராதது மாட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. எனவே சிறுவர்கள் மாடு மேய்க்க சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார்.

அப்போது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட மாட்டில் மட்டும் பாலை காலாங்கி நாதர் குடிப்பதை உரிமையாளர் பார்த்தார். இதுபற்றி ஊருக்குள் சென்று கூறி, பொதுமக்களை அழைத்து வந்து, காலாங்கி நாதரை அடித்து உதைத்தனர்.

வலி தாங்க முடியாமல் துடித்த அவர், அங்கிருந்து ஓடி, அருகில் இருந்த சங்கு இலை செடி புதருக்குள் ஒளிந்து கொண்டார். அதனை அகற்றிய ஊர்க்காரர்கள் பார்த்த போது, அங்கே காலாங்கி நாதர் தவக்கோலத்தில் காட்சி அளித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், அவரை வணங்கினார்கள். அடித்ததற்கு மன்னிப்பும் கேட்டனர். அவரை சித்தர் என்று அழைத்தனர். பிறகு சித்தரேசாமி என அழைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் அவர் சித்தேசுவரசாமியாக மாறினார்.

அவர் தவக்கோலத்தில் காட்சி அளித்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், அவரை தாக்கியதால், தண்டிக்கப்படுவோம் என்று அச்சத்தில் இருந்தனர். ஆனால் சித்தேசுவரசாமி யாரையும் தண்டிக்கவில்லை. மாறாக அவர் களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார் என்கிறது இந்தத் திருத்தலத்தின் வரலாறு.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது குறைகளை தெரிவித்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால், அதனை சித்தேசுவரசாமி நிவர்த்தி செய்வதாகவும், நோய்களை தீர்ப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனால் கோவிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சித்தேசுவர சாமியை தரிசித்தால் நல்லது என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

காந்த தீர்த்தக்குளம் :

சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக்குளங்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளங்களில் புனித நீராடி விட்டு, சாமியை தரிசனம் செய்வது வழக்கம். கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். மேலும் உப்பு, வெல்லம் போன்றவை தண்ணீரில் கரைவது போன்று கஷ்டங்களும் கரைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக்குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால், மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக்குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீரில் குளிப்பதால் நோய்கள் குணமாவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள். 

அமைவிடம் :

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது. மேலும் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு பஸ் இயக்கப்படுகிறது. அதாவது இளம்பிள்ளை செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் சித்தேசுவரர் கோவில் வழியாக தான் செல்கின்றன.

முக்தி அளிக்கும் வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவில்

முக்தி அளிக்கும் வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவில்

விஷ்ணு அலங்காரப்பிரியர். எனவே பக்தர்கள் அவரை விதவிதமாக அலங்கரித்துப் பார்ப்பது வழக்கம். அவரது அலங்காரத்தில் துளசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். மணம் மிகுந்த பொருட்களைக் கொண்டு தன்னை அபிஷேகித்து, துளசியால் தன்னை அலங்கரித்து வழிபடும் பக்தர்கள் கேட்கும் வரத்தை அருள்வது திருமாலின் வழக்கம். அப்படி தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில்.

கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் என்னும் பாளையக்காரர் தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் நிர்மாணித்த ஊர் இதுவாகும். அவரது பெயரால் ‘வெங்கடம்மாள்பேட்டை’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘வெங்கடாம்பேட்டை’ என மருவியது.

தல வரலாறு :

ராமபிரான், தன் தம்பி லட்சுமணனுடன் சீதா தேவியை தேடி இவ்வழியாக வந்தார். இயற்கை எழிலும், அழகான சூழலும், பல்வேறு சுகந்த மணங்களும் நிரம்பியிருந்த தீர்த்தவனம் என்னும் இந்தப் பகுதி ராமரைக் கவர்ந்தது. எனவே ஒரு நாள் இரவு அங்கேயே தங்கினார். மனைவியின் பிரிவால் பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்த ராமபிரான், தம்பி லட்சுமணனின் மடி மீது தலை வைத்து சுகமான நித்திரை செய்தார். பின்னர் தில்லைவனம் (சிதம்பரம்) நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

இலங்கைச் சென்று சீதையை மீட்ட ராமபிரான், திரும்பி வரும் வழியில் மீண்டும் இந்த இடத்திற்கு வந்தார். அப்போது சீதை பிராட்டி, அனுமன் ஆகியோருடன் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு அரங்கனைப் போல சேவை சாதித்து, இந்தப் பூமியின் மகத்துவத்தை உலகறியச் செய்தார்.

பிற்காலத்தில் சைவ - வைணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தில்லைவனத்தில் அரங்கனாக காட்சி தந்து அருள்பாலித்த கோவிந்தராஜபெருமாளின் சிலை கடலில் ஆழ்த்தப்பட்டது. இதனால் தில்லை திருச்சித்ரக்கூடம் வெறிச்சோடிப் போனது. இதைக் காண மனம் ஒப்பாத வைணவர்கள் பராந்தகச் சோழனிடம் முறையிட்டனர். மன்னரின் முயற்சியால் தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்புதலோடு திருச்சி த்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய அரங்கனின் சிலை 18 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டது.

ஆனால் அவ்வளவு பெரிய திருமேனியை பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு கிளம்பவே, தற்போதுள்ள சிறிய அளவிலான கோவிந்தராஜ பெருமாள் சிலை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பேரழகனாக, அரி துயில் அரங்கனாக உருவாக்கப்பட்ட 18 அடி சிலை, ராமபிரானுக்கு மிகவும் பிடித்த தீர்த்த வனத்தில் (வெங்கடாம்பேட்டை) அனந்த சயன ராமனாக மக்களால் நிலைநிறுத்தப்பட்டது.

திருமாலின் 18 அடி சிலையை, திருச்சித்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய இடம் கிடைக்காத ஆதங்கத்தில் இருந்த வைணவர்கள், தில்லைவனத்திற்கு போட்டியாக தீர்த்தவனத்தை உருவாக்க நிலைப்பாடு கொண்டனர். அதன்படி தில்லையில் காலைத்தூக்கி நின்றாடும் நடராஜபெருமானுக்கு ஒப்பாக, கால் மடித்து ஊன்றி நின்று வேய்குழல் ஊதும் வேணுகோபாலனை பாமா- ருக்மணி சமேதராக தனி சன்னிதி அமைத்து மூலவராக்கினர். திருமூலட்டானத்து இறைவனுக்கு நிகராக வைகுண்டவாச பெருமாளையும் தொடர்ந்து ஆண்டாள், ஆழ்வார்கள், உடையவர் ஆகிய மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்தனர். இப்படி சிதம்பரத்தைப் பார்த்து ஒவ்வொரு சன்னிதியாக உருவாக்கினர் என்கிறது வரலாறு.

மற்றொரு வரலாறு :

இந்த ஆலயத்திற்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அது.. துவாபரயுகம் முடிந்து கலியுகம் தொடங்கிய காலகட்டத்தை பின்னணியாக கொண்டது. காலமாற்றத்திற்கு ஏற்ப அமைதி குலைந்து, போர் சூழலும், அதர்மமும் தலை தூக்கியிருந்தது. இந்த சமயத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் இருந்து அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப் பகுதிக்கு வந்தவர், அதை ஒட்டிய நீர் வற்றியிருந்த கருட நதி (தென்பெண்ணையாறு) வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வெப்பம் தாளாமல் அவரது கால்களில் கொப்பளங்கள் தோன்றின. அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக ஒரு நீரூற்று தோன்றி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்ட மகரிஷி, அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பாதை, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து மூவுலகும் போற்றும் பூமகள் நாயகனான திருமாலை வேண்டி கடுந்தவத்தில் ஈடுபட்டார். உலகில் மறுபடியும் அறம் தழைக்கவும், தர்ம நெறி நிலைக்கவும் இத் தவத்தை அவர் மேற்கொண்டார்.

பலகாலம் தவத்திலே திளைத்த மகரிஷியின் பக்தியில் மகிழ்ந்த திருமால், தென்றல் - வாடை ஆகிய காற்றுகளை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மதேவரை சாரதியாகவும் கொண்ட தேரில் பிராட்டியாருடன் அமர்ந்தவாறு முனிவர் முன் காட்சி அளித்தார். பின்னர் வேண்டும் வரம் கேட்கும்படி மகரிஷிக்கு அருளினார்.

மகரிஷியோ, ‘இறைவா! தாங்கள் உலக நலனுக்காக எடுத்த அவதார வடிவங்களை காண ஆசைப்படுகிறேன்’ என்றார்.

அதற்கு இசைந்த திருமாலும், மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம என ஒவ்வொரு அவதார கோலத்தையும் வரிசையாக சடமர்ஷனுருக்கு காட்டினார்.

ராமவதாரம் வந்ததும் மகிழ்ந்த மகரிஷி, ‘ஐயனே! மானிட உயிர்களின் பொருட்டு - பூலோகத்தில் ராமனாகப்பிறந்து, எத்தனை துன்பங்களை அடைந்தீர். எத்தனை எத்தனை போர்களை நடத்தி அசுரர்களை வதைத்தீர். அந்த களைப்பெல்லாம் தீர தாங்கள் இவ்விடத்தில் இளைப்பாறுவதுடன், பக்தர்களுக்கும் அருள் பாலிக்க வேண்டும்’ என்றார்.

அதன்படியே லட்சுமணன் ஆதிசேஷனாக மாறி மெத்தை விரித்து குடை பிடித்து தொண்டுபுரிய, சீதை பிராட்டி ஸ்ரீதேவி வடிவிலேயே பெருமாள் திருவடிகளை வருடியவாறு வீற்றிருக்க, பெருமாளும் சயன கோலத்தை காட்டி அருளினார்.

பின்னர் அடுத்தடுத்த அவதார காட்சியை மகரிஷிக்கு அருளினார். கிருஷ்ணனாக கோவர்த்தனகிரியோடு தோன்றி காட்சி யளித்தார்.

அப்போது மகரிஷி, ‘பெருமாளே! இந்த மலை எதற்கு?’ என்றார்.

‘இது பக்தர்களை கடும் மழையில் இருந்து பாதுகாப்பதற்காக’ என்றார் பெருமாள்.

அதற்கு மகரிஷி, ‘இந்த மலை இங்கு தேவையற்றது. தங்கள் குழலோசையிலே பிரபஞ்சத்தை எல்லாம் மயக்கி பக்திபரவசத்தை ஊட்டிய ஜெகன்மோகன பால கோபாலகிருஷ்ணனாக காட்சி தர வேண்டும் ’ என்று வேண்டினார். பெருமாளும் அவ்விதமே ருக்மணி- சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலனாக காட்சியளித்தார்.

இப்படியாக பத்து அவதார திருக்கோலங்களையும் கண்டு மகிழ்ந்த மகரிஷியைப் பார்த்து, ‘இப்பொழுது திருப்திதானே?’ என பெருமாள் கேட்க, ‘கிடந்த (சயன) திருக்கோலத்திலும், நின்ற திருக்கோலத்திலும் அருள்பாலித்த தாங்கள், இத்தலத்திலேயே அமர்ந்த திருக்கோலத்திலும் காட்சியளித்து கலியுக காலத்தில் மக்கள் தங்களது திருக்காட்சியைக் கண்டு பேரின்பத்தை அடைய அருள்புரிய வேண்டும்’ என்றார், மகரிஷி.

தனக்கென எதுவும் கேட்காமல், உலக மக்களுக்காக வேண்டியதால், அமர்ந்த கோலத்திலும் அவருக்கு காட்சி தந்தார் பெருமாள் என்கிறது மற்றொரு வரலாறு.

இத்திருத்தலத்தில் மகா விஷ்ணு, நின்ற திருக்கோலத்தில் பாமா- ருக்மணி சமேத வேணுகோபாலனாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் வைகுண்டவாசப் பெருமாளாகவும், சயனத் திருக் கோலத்தில் அனந்தன் மீது துயில் கொண்ட அனந்தசயன ராமனாகவும் காட்சி தருகின்றார். இம்மூன்று திருக்கோலங்களையும் ஒருங்கே வணங்கும் அடியவர்கள் அனைத்துச் செல்வங்களையும் பெறுவதோடு, முக்தியையும் பெறுவார்கள்.

ஆலய அமைப்பு :

இந்த ஆலயம் பெரிய மதிற்சுவர்களைக் கொண்டு, சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் கீழ்ப் பகுதியில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு, கி.பி. 1884-ம் ஆண்டில் ஆட்சிசெய்த விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது. ஏழுநிலை கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதனருகே அபூர்வ கோலத்தில் கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது. 

பெரும்பாலான ஆலயங்களில் நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக, இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இத்தல கருடன் வீற்றிருக்கிறார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இந்த கருடாழ்வார் காட்சி தருகிறார்.

மகாமண்டபத்திற்குள் தெற்குநோக்கி இருக்கும் சன்னிதியில், அமர்ந்த நிலையில் வைகுந்தவாசன் சன்னிதி உள்ளது. இவருக்கு மேலே ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து காத்து நிற்கிறார். இது அமர்ந்த நிலைக் கோலமாகும். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப பெருமாள் காட்சி கொடுத்த வேணுகோபால சுவாமி சன்னிதி இருக்கிறது. 

சுமார் 6 அடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி நின்ற கோலத்தில் இவர் அருள்பாலிக்கிறார். மற்ற இரு கரங்களும் வேய்குழலை பிடித்து ஊதியபடி இருக்கிறது. வேணுகோபாலரின் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மூலவரை தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது. 

பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தருகின்றார். வடக்கே ஆண்டாள் சன்னிதி காணப்படுகிறது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் துயில் கொண்ட (கிடந்த) கோலத்தில் சயனராமர் காட்சி தந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்துகின்றார். அவரது திருமார்பில் திருமகளும், திருவடியில் சீதாபிராட்டியும், வீர ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர்.

இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள், தெலுங்கு புத்தாண்டான யுகாதி பண்டிகை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த ஆலயத்தில், 150 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.

சூரிய- சந்திரர் வழிபாடு :

கிருஷ்ணராகவும், ராமனாகவும், பெருமாளாகவும் இத் தலத்தில் திருக்காட்சித் தரும் திருமாலை, பக்தர்கள் மட்டுமின்றி சூரியனும் சந்திரனும் வழிபடுவது மிகச்சிறப்பான நிகழ்வாகக் கூறலாம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் 25-ம் நாளில் இருந்து ஆறு நாட்கள், காலை ஆறு மணிக்கு சூரியன் தன் ஒளிக்கதிர்களால் மூலவரை வணங்குகிறார். 

அதேபோல, புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும் தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களால் செங்கமலவல்லித் தாயாரை வணங்குகிறார். இது ஓர் அதிசய வழிபாட்டு நிகழ்வாகும். இப்படி சூரியனும் சந்திரனும் ஒருசேர வழிபடும் திருத்தலங்கள் மிகச்சிலவே. அதிலும் வைணவ ஆலயங்களை காண்பது அரிது. அந்த குறையைப் போக்குகிறது இவ்வாலயம். 

அமைவிடம் :

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவிலுக்குச் செல்ல குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வடலூர் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

Saturday 29 September 2018

புரட்டாசி மாதம் அசைவம் தவிர்ப்பது ஏன்?

புரட்டாசி மாதம் அசைவம் தவிர்ப்பது ஏன்?

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றும், புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதும் நம்மவர்களின் வழக்கம். மேலும் புரட்டாசி மாதங்களில் பெரும்பாலானவர்கள் அசைவத்தைத் தவிர்த்து விட்டு, சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். இதற்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறிய விளக்கம் சொல்லப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.

ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில், 6-வது ராசியாக வருவது கன்னி ராசி. சூரியன் ஒவ்வொரு ராசியில் நுழைந்து வெளிவரும் கால அளவே மாதமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சூரியன் கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் காலம் புரட்டாசி மாதம் ஆகும். கன்னி ராசியின் அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். புதன் மகாவிஷ்ணுவின் சொருபம். எனவே தான் புரட்டாசி மாதத்தில், பெருமாளை வழிபடும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது.

புதன் பகவான் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும், அந்த மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து துளசி நீரை பருக வேண்டும் என்று சாஸ்திரம் செல்கிறது.

புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது, பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. புரட்டாசி மாதம் என்பது புதனின் வீட்டில் சூரியன் இருக்கக்கூடிய காலம். புதன் கிரகம் ஒரு சாத்வீகமான கிரகம். புதனை ‘சவுமியன்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சவுமியன்’ என்பதற்கு ‘சாது, சாத்வீகமானவர்’ என்று பொருள் உண்டு. அதிர்ந்து பேசாமல் இருப்பவர்களையே நாம் ‘சாது’ என்று அழைக்கிறோம்.

புதனுக்குரிய உணவு என்பது உப்பு, காரம் இல்லாத உணவு தான். துவர்ப்பு சுவை அதிகம் உள்ள உணவுகளே புதனுக்குரிய உணவுகளாக இருக்கின்றன. இவரது உணவு வகையில் அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், சைவ உணவுகள் மட்டுமே இவருக்கானது. அதனால்தான் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதாக ஆன்மிக ரீதியிலான விளக்கம் அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் நாம் அறிவியல் ரீதியிலான விளக்கத்தையும் இங்கே பார்த்து விடுவோம். புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். மேலும் பூமியின் இயக்கத்துக்கு தகுந்தபடி நமக்கு செரிமானக் குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்படுவதோடு, கெட்டக் கொழுப்பு உடலில் தங்கிவிடும் காலமும் இது தான். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும், காற்றும் குறைந்து, மழை காலம் தொடங்கும் மாதம் ஆகும். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகி இருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இதனால் புரட்டாசி மாதத்தை ‘சூட்டை கிளப்பிவிடும் காலம்’ என்றும் சொல்லலாம்.

இந்த காலமானது, வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி, உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால் தான், நமது முன்னோர்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர்.

அது மட்டுமின்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் நோய் கிருமிகளை உருவாக்கிவிடும். இந்த நேரத்தில் காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும். அவற்றை கட்டுப்படுத்தும் அருமருந்து தான் துளசி. சளியைக் கட்டுப்படுத்தும் துளசியை பெருமாள் ஆலயங்களில் கொடுப்பார்கள். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். அங்கு துளசியை இலையாகவும், துளசி கலந்த தீர்த்தமாகவும் தருவார்கள். அதை பருகினால் வயிற்று பிரச்சினைகள் நீங்கும்.

சாதாரணமாக சைவ உணவு நமது உடலுக்கு எல்லா வகையிலும் உகந்தது. ஆனால் பலராலும் அனைத்து நேரங்களிலும் சைவத்தை மட்டுமே சாப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்கள், இதுபோன்ற காலங்களிலாவது அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நல்லது.

Friday 28 September 2018

மங்கலம் தரும் அங்காளம்மன் குங்குமம்

மங்கலம் தரும் அங்காளம்மன் குங்குமம்

அங்களபரமேஸ்வரி ஆலயத்தின் கருவறையில் இருந்து எடுத்துத் தரப்படும் குங்குமம் பிரசாதத்துக்கு அளவற்ற சக்தி உண்டு. ஆத்மார்த்தமாக யார் ஒருவர் அந்த குங்குமத்தை தம் நெற்றியில் பூசிக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அங்காளம்மனின் மகத்துவம் புரியும். பொதுவாகவே குங்குமம் என்பது கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் மங்கலத்தை தரக்கூடியது. பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம். அதில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு மங்கலத்தை உண்டாக்கும்.

மேல்மலையனூரில் குங்கும பிரசாதம் பெறும்போது மிகவும் பணிவாக, பவ்வியமாகப் பெற வேண்டும். பிறகு அதை வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இது எல்லா வித நன்மைகளையும் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கட்டை விரலால் குங்குமம் அணிந்தால் தைரியம் பிறக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் பூசினால் நிர்வாகத்திறமை மேம்படும். நடுவிரலால் குங்குமம் வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

திருமணம் கைக்கூட எளிய பரிகாரம்

திருமணம் கைக்கூட எளிய பரிகாரம்

நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல லேண்டும்.

அது முடிந்ததும் அங்காளபரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

மாங்காடு காமாட்சி மகாமேரு

மாங்காடு காமாட்சி மகாமேரு

மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவம் என்று போற்றப்படுகிறாள். அந்த தலத்தில் ஈசனை எண்ணி தவமிருந்த காமாட்சி தேவியின் தவக்கோலம் அனலாக வெளிப்பட்டு அந்தப் பகுதியையே வாட்டி வந்தது.

அந்த நேரத்தில் தான் ஆதிசங்கரர் அங்கு வந்தார். காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான மகாமேரு என்ற 43 திரிகோணங்கள் கொண்ட, ஸ்ரீசக்கரத்தை அங்கு ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்தார். சக்தி வாய்ந்த இந்த மகாமேரு அபூர்வ மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த மேருவுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு, ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்டவை மட்டுமே சாத்தப்படுகிறது. 

பின்னர் காமாட்சி அன்னையும் ஸ்ரீசக்ரமும் கொண்ட கோயிலை சோழ அரசர்கள் ஸ்ரீவித்யா முறைப்படி அமைத்தனர் என்கிறார்கள். சில காலம் முன்பு வரை கூட பக்தர்கள் இங்கு வந்து எண்ணியது நிறைவேறினால் ஸ்ரீசக்ர மேருவை புனுகுவால் மெழுகுகிறேன் என்று வேண்டிக் கொள்வார்களாம். தவசக்தியின் அடையாளமாக விளங்கும் மாங்காடு மகாமேரு காமாட்சி அன்னையின் சூட்சும வடிவமாகும்.

இந்த அர்த்த மேருவில்தான் அன்னை காமாட்சி வாசம் செய்கின்றாள். காமாட்சியம்மனின் திருஉருவம் அர்த்த மேருவான ஸ்ரீசக்கரத்திற்குப் பின்புறமாய் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றது. அன்னை காமாட்சியம்மனின் மகிமைகளை அள விட்டுக் கூற இயலாது. 

இத்தலத்தில் 6 வார எலுமிச்சம் பழ வழிபாடு சிறப்பு பெற்றது. பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு ஆறு வாரங்கள் முடிப்பதற்குள்ளாகவே அவர்களின் வேண்டுதல் நிறைவேறி விடும். இந்த வழிபாடு மூலம் திருமணம் ஆகாத ஆயிரக்கணக்கான பெண்கள் இத்தகைய பிரார்த்தனைகளின் பலனாக நற்குணம் பொருந்திய கணவனை மணம் புரிந்து நலமாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் நோய் நொடிகளும் அன்னையின் அருளால் அகன்று குணம் ஆகிவிடும்.

Thursday 27 September 2018

சரவணபவ படிகள்

சரவணபவ படிகள்

முருகனின் அறுபடைத் தலங்களில் திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகத் திகழ்கிறது. சூரனை வென்ற முருகனுக்குப் பரிசாகத் தன் மகள் தெய்வானையை தேவேந்திரன் மணம் செய்வித்த திருத்தலம் இதுவாகும்.

சைவம் (சிவவழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), சாக்தம் (அம்பாள் வழிபாடு), சௌரம் (சூரிய வழிபாடு), கவுரமாரம் (முருக வழிபாடு) என்னும் ஆறு வகையான மதங்கள் பழங்காலத்தில் இருந்தன. அவற்றை இணைக்கும் தலமாக திருப்பரங்குன்றம் கோவில் திகழ்கிறது. இதை கருவறையில் காணலாம்.

ஐராவதம் என்னும் தேவலோகத்து யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானையை மணம் செய்த விழா பங்குனி உத்திரத்தையொட்டி, இங்கு பிரம்மோற்சவமாக நடக்கிறது. முருகப்பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது. கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன. இந்தப் படிகளில் ஏறும்போது ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே செல்வது நல்லது.

குரு பகவானுக்குரிய ஸ்லோகம்

குரு பகவானுக்குரிய ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷினாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப்பாடி மேன்மைகளைப் பெறலாம்.

குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. அல்லது 16 வித விளக்கு தெரியும் பிம்ப விளக்கும் வைத்துக் கொள்ளலாம்.

Wednesday 26 September 2018

புரட்டாசி மாத விரத வழிபாடு

புரட்டாசி மாத விரத வழிபாடு

ஜாதகரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக்டோபர் முதல் வாரம்) கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி விரத பூஜை இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

குரு பகவான் தரும் யோகங்கள்

குரு பகவான் தரும் யோகங்கள்

கஜகேசரி யோகம்: குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர் களாக விளங்குவர்.

குரு சந்திர யோகம்: சந்திரனுக்கு குரு 1, 5, 9-ல் காணப்பட்டால் ‘குருச்சந்திர யோகம்’ உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ் மிக்கவர்களாகவும் நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

குருமங்கள யோகம்: குரு செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் ‘குரு மங்கள யோகம்’ உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

ஹம்ச யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், ‘ஹம்சயோகம்’ உண்டாகிறது. நல்ல உடலமைப்பையும், ஒழுக்கமான வாழ்க்கையும் ஏற்றவர்களாக இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பர்.

சகட யோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் ‘சகட யோகம்’ உருவாகிறது. வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல, இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே மற்றொரு தொகை வந்து சேரும். பொதுவாக குரு தரும் யோகம் உங்கள் சுயஜாதகத்தில் எப்படியுள்ளது என்பதைக் கண்டறிந்து, குருவைப் போற்றிக் கொண்டாடினால் பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். குருவோடு மற்ற கிரகங்கள் சேர்ந்திருந்தால், அதன் பாதசார பலமறிந்து அதற்குரிய ஸ்தல வழிபாட்டை முன்னதாகச் செய்வது நல்லது.

நாகதோஷத்தை உள்ளவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

நாகதோஷத்தை உள்ளவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

நாகதோஷம் உள்ளவர்கள், நாகாத்தம்மனை வழிபடலாம். தினமும் நாகாத்தம்மனுக்கு பூஜை செய்து வழிப்பட்டு வந்தால், நாக தோஷம் நீங்கும். மேலும் நாகாத்தம்மனை நினைத்து,கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

ஓம் ரூபப் பிரபவம் நமஹ;

ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம் ஓம் ஓம்!! 

Tuesday 25 September 2018

முருகப்பெருமானுக்குரிய நிலத்தை மீட்ட பெண் சித்தர்

முருகப்பெருமானுக்குரிய நிலத்தை மீட்ட பெண் சித்தர்

முருகப்பெருமானை பிள்ளையாகப் பெற்று, தன் சொத்துகளை எல்லாம் உதறி முருகனுக்காக தொண்டாற்றியவர் சிவகாமி பரதேசி அம்மையார். அவர் ஒரு சமயம் திருச்செந்தூர் முருகன் கோவில் தேரை வடம் பிடித்து இழுக்க முயற்சித்த போது, அங்கிருந்தவர்கள் தடுத்தனர். எனவே ‘தேர் நகரக்கூடாது’ என்று தன் தனயனான முருகப்பெருமானிடம் வேண்டுகோள் விடுத்து விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்துகொண்டார்.

சிவகாமி பரதேசி அம்மையார், தேர் வடத்தை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஒரு அடி கூட தேர் நகரவில்லை. அனைவரும் போராடிப் பார்த்தனர்; எந்த பலனும் கிடைக்கவில்லை. விழா நடத்துபவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக முருகனின் அடியவர்கள் சிலரிடம் சென்று, ‘தேர் நகராததற்கு என்ன காரணம்?’ என்று கேட்டனர்.

அவர்கள், சிவகாமி பரதேசி அம்மையாரைப் பற்றியும், அவரை ஒருவர் நிந்தித்தது பற்றியும் கூறினர். மேலும் அந்த அம்மையார், முருகப்பெருமானின் அன்னையாகும் வரம் பெற்றவர் என்றும் எடுத்துரைத்தனர். இதனால் பதறிப்போன விழாக்குழுவினர், உடனடியாக ஓடிச் சென்று கடற்கரையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த சிவகாமி பரதேசி அம்மையாரை அழைத்து வந்தனர். அவர் தேர் வடத்தைப் பிடித்து இழுத்த பிறகே, தேர் அங்கிருந்து நகர்ந்தது.

இதனால் அவரது புகழ் எட்டுத்திக்கும் பரவியது.

பண்பொழி வந்த சிவகாமி பரதேசி அம்மையார், அங்கு புது தேரை உருவாக்கினார். வண்டாடும் பொட்டலில் அன்னதான சத்திரம் கட்டினார். அதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளை பராமரிக்க பசு மண்டபம் அமைத்தார். ராகு- கேது வணங்கிய உச்சிஷ்ட கணபதியை பிரதிஷ்டை செய்தார். அதன் மீது மண்டபம் கட்டி வழிபாட்டுக்கு கொண்டு வந்தார். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவை, திருமலைக் கோவிலிலும், வண்டாடும் பொட்டலிலும் பத்து தினங்கள் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

ஒரு நாள் முருகப்பெருமான், சிவகாமி பரதேசி அம்மையார் கனவில் தோன்றி, ‘தாயே! நாளைக்கு தாங்கள் வில்வண்டியில் புளியரைக்குப் புறப்படுங்கள். அவ்வூரில் உள்ள மிகப்பெரிய வயல்வெளியில் வண்டியை நிறுத்திவிட்டு, காளைகளை அவிழ்த்து விடுங்கள். அந்த காளைகள் ஓரிடத்தில் நின்று மண்ணை கால்களால் கிளறும். அந்த இடத்தில் எனக்கு பாத்தியப்பட்ட சொத்து பட்டயம் இருக்கிறது’ என்று கூறி மறைந்தார்.

அந்த கனவிற்குப் பிறகு சிவகாமி பரதேசி அம்மையாருக்கு தூக்கம் வரவில்லை. விடிய விடிய விழுத்திருந்தார். மறுநாள் காலை விடிந்ததும் விடியாமலும் வில்வண்டியை கட்டிக்கொண்டார். தன் கணவரையும், இன்னும் சிலரையும் அழைத்துக் கொண்டு புளியரைக்கு சென்றார். அங்கு வயல்வெளியில் வண்டியை நிறுத்தி, காளைகளை அவிழ்த்து விட்டார். அது வெறிபிடித்தது போல் ஓடி, ஓரிடத்தில் நின்று மண்ணைக் கிளறியது.

சிவகாமி பரதேசி அம்மையார் கட்டளைப்படி, உடன் வந்தவர்கள் அந்த இடத்தைத் தோண்டினார்கள். அங்கே 10 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கல் ஒன்று கிடைத்தது. அதில் வேலும் மயிலும் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கல்லில் முருகப்பெருமானுக்கு உரிய 160 ஏக்கர் அளவிலான நன்செய் நிலம் மற்றும் தோப்பு துரவுகளுக்கான விவரப் பட்டியல் இருந்தது.

அந்தச் சொத்துகளை எல்லாம், ராயர் ஒருவர் பயன்படுத்தி வந்தார். ஆனால் திருமலை முருகன் கோவிலுக்கு அவர் எந்த திருப்பணிக்கும் உதவவில்லை.

தன் மகனுக்கான சொத்துகளை எப்படி மீட்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார், சிவகாமி பரதேசி அம்மையார்.

சிந்தனையின் ஊடே உறங்கியும் போனார். அப்போது மீண்டும் அவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நீங்கள் நாளை காலை பக்தர்களை திரட்டிக்கொண்டு புளியரைக்குச் செல்லுங்கள். அங்கு நமக்கு சொந்தமான நிலங்களில் ஏர் பிடித்து உழுங்கள். நான் உங்களுக்கு துணையாக வருவேன்’ என்றார்.

மகனின் ஆணை கிடைத்ததும், மறுநாள் அதிகாலையிலேயே பக்தர்கள் பலரை அழைத்துக் கொண்டு, புளியரைச் சென்று முருகனுக்கு உரிய வயல்வெளியில் ஏர் பிடித்து உழுதார்.

இதையறிந்த ராயர், தனது ஆட்களை திரட்டிக் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தான். பின் காளைகளை அவிழ்த்து விட்டு, பக்தர்களை விரட்ட முயன்றான்.

அப்போது காளைகள் அனைத்தும் ஆவேசம் கொண்டது போல், ராயரையும், அவர் திரட்டி வந்த ஆட்களையும் விரட்டின. இதையடுத்து அவர்கள் பயந்து ஓடி ஒளிந்தனர். பிரச்சினை முடிந்தது என்று பரதேசி அம்மையார் நினைத்தார். ஆனால் ராயர் விடுவதாக இல்லை. நீதிமன்றத்தை நாடினார். ஆனால் முருகப்பெருமானின் அருளால் நீதிமன்றத்திலும், சிவகாமி பரதேசி அம்மையாருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

இதையடுத்தும் பல காலம் முருகப்பெருமானுக்கு திருப்பணியாற்றி வந்தார், சிவகாமி பரதேசி அம்மையார். இவர் சமாதி நிலை அடைந்த காலம் மிக விசேஷமானது. முருகப்பெருமான் பிறந்த நன்நாளாம் வைகாசி விசாகத்தன்று, தன் மகனான திருமலை முருகனின் திருவடிகளில் கலந்தார். திருமலைக்குக் கீழாக, முருகன் சன்னிதிக்கு நேராக, வண்டாடும் பொட்டலில் சிவகாமி பரதேசியம்மையாரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இங்கு வைகாசி விசாகத்தன்று குருபூஜை நடக்கிறது.

வண்டாடும் பொட்டலில் தான் தனக்கு சமாதி அமைக்கவேண்டும் என பரதேசிஅம்மையார் உயிரோடு இருக்கும் போதே முடிவு செய்துவிட்டார். திருமலை குமரனின் மூல இடத்தில் புளியமர அடியில் அவர் வீற்றிருப்பது போலவே, தான் சமாதி ஆகும் இடத்திலும் ஒரு புளிய மரத்தினை உருவாக்கினார். அதற்கான கருங்கல் மண்டபம் கட்டி வைத்து விட்டார்.

அம்மையார் திருப்பணி செய்த 626 படிகளில் ஏறிச் செல்ல, வயதானவர்கள் திணறி வந்தார்கள். எனவே கீழே இருந்தே முருகனை தரிசித்து வந்தனர். இவர்கள் பிரச்சினை தீர 2010-ல் ரூ.5½ கோடி செலவில் இரு வாகனங்கள் சென்று வருகின்ற அளவுக்கு மலை சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பணி முடிந்து வாகனங்கள் மலை உச்சி வரை செல்கின்றன.

இந்த திருப்பணி செய்தவர்கள், சிவகாமி பரதேசி அம்மையாரின் சிலை ஒன்றையும் உருவாக்கினர். அந்த சிலை வண்டாடும் பொட்டலில், பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இவ்விடம் வந்தாலே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கிறது. மேலும் பெண் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இவ்விடத்தில் வந்து அம்மையை வணங்கி நின்றால், 100 சித்தர் பீடத்துக்கு சென்று தரிசித்த பலன் கிடைப்பதாக ஐதீகம். நாள் பட்ட நோய்கள் எல்லாம் நீங்குகிறது. கஷ்டங்கள் எல்லாம் மறைகிறது. நீண்ட நாள் வழக்கு தீருகிறது. இழந்த பொருள் மீண்டும் கிடைக்கிறது. வீடு கட்டும் யோகம் உருவாகுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக முருகப்பெருமானை போன்ற அழகான குழந்தைப்பேறு கிடைக்கிறது.

சிவகாமி பரதேசி அம்மையை வணங்கி விட்டு, அருகில் உள்ள ராகு-கேது வழிபட்ட விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் கோவில் அடிவாரத்தில் உள்ள வல்லப விநாயகரை வணங்கி முருகன் பாதத்தினையும், அதன் அருகே பாறையில் புடைப்பு சிற்பமாக கூப்பிட்ட கையோடு அருள்புரியும் சங்கிலி மாடனையும் வணங்கி மலை மீது ஏறலாம்.

அமைவிடம்

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் வண்டாடும் பொட்டல் உள்ளது. செங்கோட்டையில் 5 கிலோமீட்டரில் வண்டாடும் பொட்டலை அடையலாம். தென்காசி, செங்கோட்டைக்கு ரெயில் வசதி உண்டு. செங்கோட்டையில் அச்சன் கோவில் செல்லும் வழியில் பண்பொழி என்னும் இடத்தில் அம்மை சமாதியும், முருகன் கோவிலும் உள்ளது.

இந்த வார விசேஷங்கள் - 25.9.2018 முதல் 1.10.2018 வரை

இந்த வார விசேஷங்கள் - 25.9.2018 முதல் 1.10.2018 வரை

25-ந்தேதி (செவ்வாய்) :

* மகாளய ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் துளசி பிருந்தாவன காட்சி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

26-ந்தேதி (புதன்) :

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

27-ந்தேதி (வியாழன்) :

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.

28-ந்தேதி (வெள்ளி) :

* பரணி மகாளயம்.
* சங்கடஹர சதுர்த்தி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயார் திருமஞ்சன சேவை.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு.
* கீழ்நோக்கு நாள்.

29-ந்தேதி (சனி) :

* கார்த்திகை விரதம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

30-ந்தேதி (ஞாயிறு) :

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குள்ளகரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* இன்று முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
* மேல்நோக்கு நாள்.

1-ந்தேதி (திங்கள்) :

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.

புரட்டாசி மாதமும், கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களும்

புரட்டாசி மாதமும், கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களும்

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது. இது, தமிழ் மாதங்களில் 6-வது மாதமாகும். இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.

புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.

இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.

புரட்டாசியில் கடைப்பிடிக்கும் விரதங்கள்...

ஸித்தி விநாயக விரதம் - இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

துர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

மகாலட்சுமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

அமுக்தாபரண விரதம் - புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

ஜேஷ்டா விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

சஷ்டி-லலிதா விரதம் -  புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.

கபிலா சஷ்டி விரதம் - புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

Monday 24 September 2018

காரிய தடை நீக்கும் கணபதி ஹோமம்

காரிய தடை நீக்கும் கணபதி ஹோமம்

எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பாக கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் காரியங்கள் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.

கணபதி ஹோமத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் செய்வது இன்னும் கூடுதல் பலன்களைத்தரும். தேன், பால், நெய் கலந்த கலவையை கணபதி ஹோமத்தில் இட்டால் ராஜ வசியம், அரசு பதவிகளைப் பெறலாம்.

திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெற்று வளமோடு வாழ நெல் பொரி, திருமதுரம் கொண்டு வேள்வி செய்ய வேண்டும். தேன் கொண்டு ஹோமம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்குவதுடன், செல்வச் சிறப்போடு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

எடுத்துக் கொண்ட மந்திரம் சித்தி பெற வேண்டுமானால் நெய் அப்பத்தினால் ஹோமம் செய்ய வேண்டும். கொழுக்கட்டையினால் ஹோமம் செய்தால் தொட்டதெல்லாம் ஜெயம் தான். பொருள் வளம் பெற வேண்டுமெனில் கரும்புத் துண்டால் ஹோமம் செய்ய வேண்டும். நெய், தேங்காய்த்துண்டு, சத்துமாவு, அப்பம், மோதகம், கரும்புத்துண்டு, எள்ளுருண்டை, நெல் பொரி, அவல், வாழைப்பழம், வில்வ சமித்து, அருகம்புல், சர்க்கரைப் பொங்கல் இவைகளால் ஹோமம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

கடன் தொல்லையாலும், வறுமையாலும் வாடுபவர்கள் கருங்காலிக் குச்சியால் வேள்வி செய்தால் அவற்றிலிருந்து விடுபடலாம். கணபதி ஹோமத்தை பவுர்ணமி, மாதப் பிறப்பு, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்தால், நாம் வேண்டும் பலன்கள் நிச்சயம் கிட்டும்.

உங்களால் கணபதி ஹோமம் நடத்த முடியாவிட்டால் கணபதி ஹோமம் நடைபெறுகிற இடங்களுக்குச் சென்று ஹோமத்துக்குத் தேவையான முழுத்தேங்காய், பழவகைகள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், மலர் வகைகள், தாமரை மலர், சிவப்பு வஸ்திரம் போன்றவற்றை அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு வழங்கலாம். இது கணபதியின் கடைக்கண் பார்வைபட வழிவகுக்கும்.

தோல் நோய் தீர்க்கும் கருடன் கோவில்

தோல் நோய் தீர்க்கும் கருடன் கோவில்

தோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர்வட்டம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.

தல வரலாறு :

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர், மனித ஆன்மாவிற்கு ஏற்படும் வலி மற்றும் பாவங்களில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழிமுறைகளைத் தெரிவிக்க வேண்டி விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றி வந்தார். விஷ்ணு தனது வாகனமான கருடனிடம், மனிதனின் ஆன்மா இழிநிலையில் இருந்து மீண்டு நன்னிலை பெறுவதற்கும், ஆன்மா இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்குமான வழிமுறைகளைச் சொல்லத் தொடங்கினார்.

உடனே கருடன், இறைவன் சொல்லும் வழிமுறைகளைத் தவமியற்றி வந்த முனிவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முனிவர் தவமியற்றி வந்த இடத்தின் அருகிலிருந்த குளத்தின் கரையில் சென்று அமர்ந்தது. விஷ்ணு, கருடனிடம் சொன்ன வழிமுறைகள் அனைத்தும், முனிவருக்கும் நன்றாகக் கேட்டது. மனித வாழ்வுக்கான நன்னெறிகளை விஷ்ணு வழங்கிய அந்த இடம் புனிதமாகக் கருதப்பட்டது. பிற்காலத்தில் இதனையறிந்த வேட்டாத்து நாட்டு மன்னர், அவ்விடத்தில் கருடனுக்கான கோவில் ஒன்றைக் கட்டுவித்தார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்கிறது.

கேரளத்து சிற்பியான பெருந்தச்சன், தான் செய்த கருடன் சிலை ஒன்றை வேட்டாத்து நாட்டு மன்னருக்குப் பரிசாகத் தந்தார். அந்தச் சிலையின் அழகைக் கண்டு மகிழ்ந்த மன்னன், ‘இந்தக் கருடன் சிலை நல்ல உயிரோட்டத்துடன் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை உண்மையாகப் பறந்து சென்றால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டார்.

உடனே சிற்பி, “இந்தக் கருடன் சிலையை கற்புடைய பெண் எவராவது தொட்டு, பறக்கும்படி வேண்டினால், உண்மையாகவே கருடன் பறந்து செல்வார்’ என்றார்.

அதனைக் கேட்ட மன்னன் கோபமடைந்து, ‘சிற்பியே! சிலை எப்படிப் பறந்து செல்லும்? தாங்கள் சொன்னதை இன்னும் சில நாட்களில் நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லையெனில் உமது உயிரை இழக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.

அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சிற்பி, தனது மனைவியிடம் அரசவையில் நடந்ததைப் பற்றிச் சொன்னார். மறுநாள் அந்தச் சிற்பியின் மனைவி, சிற்பியை அழைத்துக் கொண்டு அரசவைக்குச் சென்றாள். பின்னர், அங்கிருந்த கருடன் சிலையைத் தொட்டு வணங்கிய அவள், ‘சிலையாக இருக்கும் தாங்கள் உயிர் பெற்றுப் பறந்து சென்று, என் கணவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டினாள்.

என்ன ஆச்சரியம்.. கருடன் சிலை உயிர் பெற்றுப் பறக்கத் தொடங்கியது. அங்கிருந்து பறந்து சென்ற கருடன் குளக்கரை ஒன்றில் போய் அமர்ந்து மீண்டும் சிலையாக மாற்றம் பெற்றது. பறந்து சென்றக் கருடனைப் பின் தொடர் ந்து வந்த மன்னரும், மற்றவர்களும் குளக்கரையில் இருந்த கருடன் சிலையை வணங்கினர். அதன் பிறகு அந்த மன்னன், அங்கு கருட னுக்குத் தனிக்கோவில் ஒன்றைக் கட்டினான் என்று மற்றொரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு 

இக்கோவிலில் இறக்கைகளை விரித்துப் பறப்பதற்குத் தயாராக நின்ற நிலையில், மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கருடன். இவர் பாதி மனிதத் தோற்றத்திலும், பாதி கருடன் தோற்றத்திலுமாக காட்சி தருகிறார். ஆலயத்தின் உட்பகுதியில் விஷ்ணு, கூர்ம (ஆமை) தோற்றத்தில் இருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியில் சங்கர நாராயணன், சிவபெருமான் ஆகியோருக்கும், மேற்குப் பகுதியில் சாஸ்தா, பகவதி, கணபதி மற்றும் பத்ரகாளி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகப் பகுதியில் ஓரிடத்தில், மேடை ஒன்றில் பல நாகங்களின் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்திற்குத் தெற்கே பெரிய அளவிலான தீர்த்தக்குளம் ஒன்று இருக்கிறது.

வழிபாடும்.. பலன்களும்.. 

வெள்ளமச்சேரி கருடன் கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் ‘கருடன் விழா’ நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 12 மற்றும் 13-ம் நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழங்கள் மற்றும் இளநீரை கருடனுக்குச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். பருவ நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டி, பெற்றோர்கள் கோவில் முன்பகுதியில் விற்கப்படும் தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நாகம் மற்றும் அதன் முட்டைகளை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர்.

தோல் நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கோவிலின் முன்பகுதியில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கூடையிலான வெள்ளரிக் காயை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர். இவை தவிர பறவைகளால் வந்த காயம் மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவதற்கும், இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தங்கள் விளைநிலங்களில் விளையும் பயிர்களைப் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் இங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர்.

மஞ்சள் பாயசம் :

இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மஞ்சள் மற்றும் பாயசம் கலந்த, மஞ்சள் நிறத்திலான பாயசம் வழங்கப்படுகிறது. இந்தப் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிடுபவர்களுக்கு, அவர்களுடைய தோல் நோய் எதுவாயினும் விரைவில் குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. கேரளாவில் இக்கோவிலில் மட்டுமே மஞ்சள் கலந்த பாயசம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெயர்க்காரணம் :

கருடன் கோவில் அமைந்திருக்கும் இடம் ‘வெள்ளமச்சேரி’ என்று அழைக்கப் படுகிறது. கோவிலுக்கு அருகில் தீர்த்தக் குளம் ஒன்று உள்ளது. இந்த தீர்த்தக்குளத் தில் முன்காலத்தில் வெள்ளை ஆமைகள் அதிக அளவில் இருந்திருக்கின்றன. இதனால் இப்பகுதி ‘வெள்ளை ஆமைச் சேரி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவே காலப்போக்கில் ‘வெள் ளமச்சேரி’ என்று மருவிவிட்டதாக கூறுகிறார்கள். 

கருடசேவை :

கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை வழிபடுபவர்களுக்கு, மறு பிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற் சவத்தின் முக்கிய நிகழ்வாகக் கருடசேவை நடைபெறுகிறது. இப்பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாகப் பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ‘கருடவாகன சேவை’ நடைபெறுகிறது. 

நாகதோஷம் நீங்க.. :

நாகதோஷம் இருப்பவர்கள், ஒரு மண் கலசத்தில் உயிருள்ள பாம்பை உள்ளே வைத்து, கலசத்தின் மேற்பகுதியில் வெள்ளை நிற பருத்தித் துணி ஒன்றினால் மூடி, இக்கோவிலுக்குக் கொண்டு வருகின்றனர். பின்னர், கோவில் வளாகத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்தக் கலசத்தைப் போட்டு உடைக்கின்றனர். 

கலசத்தில் இருந்து வெளியேறும் பாம்பு சீற்றத்துடன் எழுந்து நிற்கும் வேளையில், அங்கிருக்கும் அர்ச்சகர், கருட பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, பாம்பின் மேல் தீர்த்த நீரைத் தெளிக்கிறார். உடனே அந்தப் பாம்பு அங்கிருந்து தென்திசையில் வெளியேறிச் சென்று விடுகிறது. அப்படிச் சென்று விட்ட பின்பு, அவர்களது நாகதோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உயிருடன் பாம்பைப் பிடித்து வந்து செய்யப்படும். இந்த வழிபாடு, பலருக்கும் ஆச்சரியதை அளிப்பதாக இருக்கிறது. 

பெரிய திருவடி :

வைணவ சமய ஈடுபாடுடையவர்கள், கருடனைப் ‘பெரிய திருவடி’ என்றும், அனுமனை ‘சிறிய திருவடி’ என்றும் அழைப்பதுண்டு. கருடனின் வலிமையைக் கண்ட விஷ்ணு, கருடனைத் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக் கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது, அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால், ‘திருவடி’ என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. கருடன் தான் விஷ்ணுவின் முதன்மை வாகனம் என்பதால், கருடன் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். ராமாயண காலத்தில் இறைவனுக்கு அனுமன் வாகனமாக இருந் ததால், அவர் ‘சிறிய திருவடி’ எனப்படுகிறார். 

அமைவிடம் :

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, வெள்ளமச்சேரி. இக்கோவிலுக்குச் செல்லக் கோழிக்கோடு மற்றும் திரூர் நகரங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Sunday 23 September 2018

மோட்சம் கிடைக்க பாகவதம் படியுங்கள்

மோட்சம் கிடைக்க பாகவதம் படியுங்கள்

பேராபத்துகள் நிறைந்த கரையில்லாப் பிறவிப் பெருங்கடலே மானுட வாழ்வு. இப்பெருங்கடலை எந்தக் கப்பலைக் கொண்டு எந்த மாலுமியின் உதவியால் கடப்பது? 

நம்மைக் காப்பாற்றக் கருணை உள்ளம் கொண்ட வேதவியாஸர் என்னும் மாமுனி ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்னும் கப்பலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். இக்கப்பலில் ஏற விருப்பமுள்ளவர்கள் சரணாகதி நெறியில் நின்று நித்ய பூஜை, தோத்திர பாராயணங்கள், கர்மானுஷ் டானாதிகள், பகவத் விஷயங்களைக் கேட்டல் முதலியவைகளைச் சோம்பலின்றி நம்பிக்கையுடன் செய்து வரவேண்டும். 

அப்படி செய்தால் மனம் தெளிவடைந்த ஓர் நன்னாளில் பிறவிப் பெருங்கடலின் மறுகரையான பகவானுடைய திவ்ய சாசனங்களை அடைய முடியும். அந்தப் பகவானே அருளாயிருந்து கப்பலை ஓட்டிச் செல்வான். நம்மை கரையை அடையச் செய்வான். ஸ்ரீமத் பாகவதம் என்பது ஓர் கற்பக விருஷம். அதன் பெருங்கிளைகள் 12 ஸ்கந்தங்கள். சிறு சிறு கிளைகளாக இருக்கும் மேலான அத்தியாயங்களுடன் அது அடர்ந்து படர்ந்துள்ளது. 

அந்த மரத்தினுடைய இனிய நறுமணம் வீசுகின்ற பூங்கொத்துக்கள் தான், ஸ்ரீவியாச முனிவரால் உபயோகப்படுத்தப்பட்ட பதவின் யாசங்கள், அதன் குலைகள் தான் 3,000க்கும் மேலான செய்யுட்கள். இவ்வாறு விரிந்து பரந்து வளர்ந்திருக்கின்ற பாகவதத்தை படித்து மனதை அதில் லயித்து விட்டால், மோட்சம் என்ற சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம்

புரட்டாசி பவுர்ணமி: திருவண்ணாலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

புரட்டாசி பவுர்ணமி: திருவண்ணாலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத புரட்டாசி பவுர்ணமி வருகிற திங்கட்கிழமை காலை 8.02 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 8.45 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீகுமர குருபரர் வாழ்வில் ஸ்ரீகருடன்

ஸ்ரீகுமர குருபரர் வாழ்வில் ஸ்ரீகருடன்

ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகன் அருளினால் பேச்சாற்றல் மட்டுமின்றி, மறை ஞானமும், வாக்கு வன்மையும் அருளப் பெற்றார். அப்போது ஒருமுறை, காசி மாநகரில் ஸ்ரீகுமரக் கடவுளுக்கு ஒரு மடம் அமைப்பதற்காக, அப்பகுதியை ஆண்டு வந்த முஸ்லிம் அரசனைப் பார்க்க அவனது அரசவைக்குச் செல்ல விரும்பினார் ஸ்ரீகுமர குருபரர். அப்பொழுது அவருக்கு வாகனமாக ஒரு சிங்கமே வந்தது.

அதில் ஏறியபடி கம்பீரமாக அரண்மனையை அடைந்தார் சுவாமிகள். அரசனோடு சேர்ந்து அவையே அச்சம் அடைந்தது. இருப்பினும் ஒரு இந்து துறவிதானே என அலட்சியத்துடன் அவரிடம் உருது மொழியில் உரையாடினார் அரசர். கலை வாணியின் அருளால் ஸ்ரீகுமர குருபரரும் அம்மொழியிலேயே பதில் அளித்தார். அதைக் கண்டு மேலும் அதிர்ந்தார் அரசர்.

இனி அவரது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியது தான் என்னும் நிலையில், அவ்வரசர் ஒரு வித்தியாசமான நிபந்தனையுடன் மடம் அமைக்க நிலம் தருவதாக ஒப்புக் கொண்டார். அது, காசியில் நாளைக் காலையில் கருடன் எவ்வளவு தூரம் வானில் வட்டம் இடுகிறதோஅந்த பகுதிகள் முழுவதையும் தானம் அளிப்பதாக அரசர் அறிவித்தார்.

காசியில் கருடன் பறக்காது என்னும் இந்துக்களின் நம்பிக்கையையும், அவர் அப்படிப் பறந்து ஒரு போதும் காணாததாலும், அப்படிக் கூறி சாமார்த்தியமாக தானம் தருவதில் இருந்து தப்பிக்கலாம் என்று எண்ணினார். 

மறுநாள் காலையில் அரண்மனை உப்பரிக்கை யில் அரசனும், ஸ்ரீகுமர குருபரரும் நின்று கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு கழுகு தோன்றி, அரசர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காசியின் பெரும் பகுதி இடங்களை சுற்றி வளைக்கும் அளவிற்கு வட்டமிட்டு மறைந்தது.

அரசருக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் வாக்கு கொடுத்தபடி அந்நிலங்களை ஸ்ரீகுமர குருபரருக்கே தானம் அளிப்பதாக சாசனம் எழுதிக் கொடுத்தார். அந்த மடம் ஸ்ரீகௌமார மடம் என்னும் பெயரில் காசியில் இன்றும் உள்ளது. இதனை இந்துக்களுக்கு வழங்கிய பெருமை ஸ்ரீகருட பகவானையே சாரும்.

Friday 21 September 2018

கயிலைக் காட்சியை அருளும் பிரான்மலை பைரவர் திருக்கோவில்

கயிலைக் காட்சியை அருளும் பிரான்மலை பைரவர் திருக்கோவில்

வரலாற்றுப் புகழ் கொண்ட பறம்பு மலை, சங்க காலத்தில் வள்ளல் பாரி ஆட்சி செய்த பறம்பு நாட்டின் தலைமைப் பதியாக விளங்கியது. புலவர் பெருமான் கபிலர், வள்ளல் பாரியின் உள்ளம் கவர்ந்த உயர் பண்பாளர். அவர் பறம்பு மலையில் பாரியோடு உடனிருந்து பல காலம் வாழ்ந்ததால், பறம்புமலை தமிழ்ப்பதியாகவும் சிறந்தது. அன்பால் தன்னை அர்ச்சிக்கும் எருக்க மலரையும், அரியதாக.. தனக்கு உரியதாக ஏற்றுக்கொண்ட பெருங்கருணைப் பேரருளாளன் எழுந்தருளியிருக்கும் மலை என்பதால், சிவமணம் கமழும் தெய்வ திருப்பதியாகவும் திகழ்ந்தது.

இப்படி தலைமைப் பதியாகவும், தமிழ்ப் பதியாகவும், தெய்வத்திருப்பதியாகவும் பெருமை பெற்ற பறம்பு மலை, 7-ம் நூற்றாண்டில் ‘திருக்கொடுங்குன்றம்’ என்று அழைக்கப்பட்டிருப்பதை திருஞானசம்பந்தர் சுவாமிகளின் திருவாக்கால் அறிய முடிகிறது.

திருஞானசம்பந்தப் பெருமான் சோழ நாட்டில் இருந்து பாண்டிய நாட்டின் தலைமை இடமான மதுரை மாநகருக்குப் புறப்பட்டார். அப்போது அந்த நாட்டிற்குள் நுழைந்ததும் முதன் முதலாகக் திருக்கொடுங்குன்றத்தை பார்த்தார். அங்கே அருட்கருணைத் திருவாளை வழிபட்டு, பண்சுமந்த திருப்பதிகம் ஒன்றை திருஞானசம்பந்தர் அருளியுள்ளார். திருத்தலங்களில் மூவர் பாடிய தேவாரம் பெற்ற சிவதலங்கள் பெருமையும், அருமையும் கொண்ட பெருஞ்சிறப்புடையன.

திருநாவுக்கரசு சுவாமிகள், ‘கொடுங்குன்றன் காண், கொல்லை ஏற்றினான் காண்’ எனத் திருவாரூர்த் திருத்தாண்டத்தில், இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானைச் சிந்தித்து வந்தனை செய்துள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘கொடுக்கிலாதானைப் பாரியே கூறினும் கொடுப்பாரிலை’ என வள்ளல் பாரியைப் புகழ்வதன் மூலம் இத்திருத்தலத்தை நினைந்துள்ளார். மாணிக்கவாசக சுவாமிகளோ, ‘கொடுங்குன்றின் நீள்குடுமிமேல் தேன் விரும்பும் முடவனைப்போல..’ எனப்பாடுவதன் மூலம் இத்தலத்தை எண்ணியுள்ளார். நால்வர் பெருமக்கள் திருவுள்ளங்களும் நினைந்து நெகிழ்ந்து, மகிழ்ந்து போற்றிய திருத்தலம் திருக்கொடுங்குன்றம் ஆகும்.

இத்திருத்தலத்திற்குப் பதினைந்தாம் நூற்றாண்டில் வழிபட வருகை புரிந்த அருணகிரிநாதருக்கு இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் திருநடனம் செய்து காட்சி தந்தருளியதாக அருணகிரியாரின் திருவாக்கால் அறிய முடிகிறது.

தமிழ் உலகில் வள்ளல் பாரியை நினைவில் கொண்டு ‘பறம்புமலை’ என்றும், சமய உலகில் எழுந்தருளியுள்ள பரம்பொருளை மனதில் கொண்டு ‘திருக்கொடுங்குன்றம்’ என்றும் பேசப்பட்ட திருத்தலம், இன்று ‘பிரான்மலை’ என அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை, ‘திருக்கொடுங்குன்றநாதர்’ என்றே மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். இரண்டாயிரத்து ஐந்நூறு அடி உயரமுள்ள இந்த மலையைச் சங்க காலத்திலேயே, ‘ஈண்டு நின்றோர் க்கும் தோன்றும்.. சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்..’ எனப்புகழ்ந்தார் புலவர் பெருமான் கபிலர்.

பாதாளம், பூமி, கயிலாயம் ஆகிய முப்பெரும் பகுதிகளாக சிந்தரித்து அமைக்கப்பெற்றுள்ளது இந்தத் திருக்கோவில். மலையின் அடிவாரத்தைப் பாதாளமாகவும், அதற்கு மேல் உயரப் பகுதியை பூமியாகவும், அதன் மேல் உச்சிப் பகுதியைக் கயிலாயமாகவும் கொண்டுள்ள ஆலய அமைப்பு வித்தியாசமானது ஆகும். இம்மூன்று பகுதித் திருக்கோவில்களையும் உள்ளடக்கிக் கொண்டு, மிகப்பெரிய திருச்சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளது. அது ‘சுந்தரபாண்டியன் திருமதில்’ என அழைக்கப்படுகின்றது.

மலையின் மூன்று பகுதிகளில் உள்ள கோவில்களிலும், மண்டபங்களிலும் உள்ள மூன்று கல்வெட்டுகளில் ‘பாரீசுவரம்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பாரீசுவரம்’ என்ற பெயர் 12 மற்றும் 13-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களில் தான் இடம்பெற்றுள்ளது.

மலையின் அடிவாரத்தில் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கித் தொடங்கும் பாதை தென்படும். ஆலயத்திற்குச் செல்லும் இந்த வழியில் மேற்கு முகமாகக் கட்டப்பட்டுள்ள துரைராஜா மண்டபத்தை அடைந்ததும், வடக்குபகுதி மதிலுக்கிடையே திருக்கோவிலின் பிரமாண்டமான பிரதானத் திருவாசல் உள்ளது. திருவாசலைக் கடந்ததும் திருக்கோவிலின் தெற்கு மதிலுக்கும், வடக்குப் பகுதி மலையின் அடிவாரப் பாறைக்கும் இடையே கல்தளம் கொண்ட பாதையின் கிழக்குக்கோடியில் மதுபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது. இது ‘தேனாடி தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தீர்த்தமாடி கொடுங்குன்றநாதரைத் தரிசித்தால், வாய்க்காத மகப்பேறு வாய்க்கும் என்பதும், தீராத நோய்கள் உடனடியாக அகலும் என்பதும், செல்வமும், செல்வாக்கும் சேர்ந்து வரும் என்பதும் ஐதீகம்.

முகமண்டபத்தில் நந்தி கம்பீரமாகக் காட்சி தருகிறது. மகா மண்டபத்துள் சன்னிதிக்கு நேராக மேற்கே நந்தி, பலிபீடம், சூரிய பிரபை ஆகியவை உள்ளன. திருக்கொடுங் குன்ற நாதரின் பிம்பம் சூரிய பிரபையில் தெரியு மாறு அமைக்கப் பெற்றுள்ளது. புகழார்ந்த பாரிவேள், முல்லைக் கொடிக்குத் தேரளித்த காட்சியைத் திருக்கோவிலின் பூமிப் பகுதியில் சுதைச் சிற்பமாகத் திகழ வைத்திருப்பது பொருத்தமாகவும், பொலிவூட்டுவதாகவும் இருக்கிறது.

அதற்கு மேற்கே பிரான்மலையில் பிரசித்தி பெற்ற பைரவர் திருக்கோவில் உருவாக்கம் கொண்டுள்ளது. தெற்கு முகமாக உள்ள பைரவர் சன்னிதியின் முன் மண்டபத்தில், மேற்கு தூணில் கிழக்கு முகமாகக் கருப்பர் சுவாமியும், கிழக்குத் தூணில் மேற்கு முகமாகச் சன்னாசிக் கருப்பர் சுவாமியும் பைரவ மூர்த்திக்கு முன்னோடிகள் போல் அமர்ந்துள்ளனர். கேட்டதை கிடைக்கச் செய்யும், நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் பைரவராக திகழ்வதால், இந்த பைரவர் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். பைரவருக்கு பக்தர்களால், வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் விமரிசையாக செலுத்தப்படுகின்றன.

நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள பைரவர், வலது திருக்கரங்களில் சூலமும், உடுக்கையும், இடது திருக்கரங்களில் நாக பாசமும், கபாலமும் ஏந்தியிருக்கிறார். பைரவர் திருக்கோவிலுடன் இணைந்து, மேற்கே தனி விமானச் சிறப்புடன் விளங்குகிறது விஸ்வநாதர் திருக்கோவில். கிழக்கு நோக்கியுள்ள விஸ்வநாதப் பெருமானும், அந்த சன்னிதிக்கு தெற்கே விசாலாட்சி அம்மையாரும் உள்ளனர்.

பூமித்தளத்தில் இருந்து மேல்நோக்கி அமைக்கப் பெற்ற படிக்கட்டுகளில் வடக்கு முகமாக ஏறியவுடன், மேற்கே லட்சுமி மண்டபமும், கிழக்கே மங்கைபாகர் ஆறுகால் மண்டபமும் உள்ளன. மங்கைபாகர் சுவாமியின் மங்கலத் திருமணக்கோலத்தை கண்டு மகிழ வருகை தந்த தேவர்கள், கூடி அமர்ந்திருந்த இடமாக ‘தேவசபா மண்டபம்’ கருதப்படுகிறது. முகமண்டபத்திற்கு மேற்கே குடவரைக் கருவறை இருக்கிறது. 

பாறையைக் குடைந்து நீண்ட சதுர வடிவில் தூண்களே இல்லாது அமைக்கப்பட்டுள்ளது, இந்தக் கருவறை. குடவரையைச் செதுக்கும்போது, பாறையிலேயே செதுக்கி உருவாக்கிய திரு மேனிகளாக அம்மையும், அப்பனும் திருமணத் திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். இதற்கு கற்பூர ஆரத்தி கிடையாது. திருக்கயிலாயத்தில் அம்மையப்பர் வீற்றிருந்து அருள்பாலிப்பது போலவே, திருக் கொடுங்குன்றத்திலும் மங்கைப்பாகராகத் திருமணக் கோலத்துடன் எழுந்தருளி திருவருள் வழங்கி வருவதால் இத்திருத்தலம் ‘தென் கயிலாயம்’ எனப் பெயர்ப்பெற்று விளங்குகிறது.

காய்ச்சல் போக்கும் இறைவன் :

மகாமண்டபத்தின் மேற்கே, கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ள ஓர் அபூர்வ மூர்த்தியின் தோற்றம் எல்லோரையும் ஈர்க்கிறது. மூன்று திருமுகங்களும், நான்கு திருக்கரங்களும், மூன்று திருப்பாதங்களும் கொண்ட சிறப்புமிக்க அந்த சிலா ரூபத்தை ‘ஜ்வர பக்ந மூர்த்தி’ என்று கூறுகிறார்கள். இந்த மூர்த்தி குறிப்பிட்ட திருத்தலங்களில் மட்டுமே உள்ளதாம். கொடுமையான தீராத காய்ச்சல் உள்ளவர்கள், இம்மூர்த்தியை ஒரே ஒரு முறை வழிபட்டாலே போதுமாம். எத்தகைய காய்ச்சலும் சுகமடைவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் வாணாசுரன் என்ற சிவபக்தன் இருந்தான். அவன் மாவலிச் சக்கரவர்த்தியின் மைந்தன் ஆவான். ஒரு முறை தன்னுடைய பக்தனாக வாணாசுரனுக்காக, மகாவிஷ்ணுவோடு போர் செய்ய வேண்டிய சூழல் ஈசனுக்கு ஏற்பட்டது. அந்த போரின் போது மகாவிஷ்ணு, சீதள சுரத்தை சிவபெருமான் மீது ஏவினார். அந்த சீதள சுரத்தை அழிக்க, சிவபெருமான் அனுப்பிய வெப்பசுரம், மூன்று சிரம், நான்கு கரம், ஒன்பது விழி, மூன்று கால்களுடன் அபூர்வத் தோற்றம் பெற்றுச் சென்றதாம். சீதள சுரமும் கணத்தில் அழிக்கப்பட்டதாம். இதனால் அபூர்வத்தோற்றம் பெற்ற அம்மூர்த்தி ‘ஜ்வர பக்ந மூர்த்தி’ எனப்பெயர் கொண்டதாம். 

அமைவிடம் :

மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேரடியாக பிரான்மலைக்கு பேருந்து உண்டு. பிரான்மலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதுமே கோவில் இருக்கிறது.

விநாயகரும் ஜென்ம நட்சத்திர வழிபாடும்

விநாயகரும் ஜென்ம நட்சத்திர வழிபாடும்

அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.

பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.

கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.

ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.

மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.

திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.

புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.

ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.

மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.

பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும்.

உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.

சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.

அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.

கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.

மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.

பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.

திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தவும்.

அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அங்காரம் செய்யலாம்.

சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.

பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.

உத்திரட்டாதி: ரோஜா மாலை அங்காரமே போதும்.

ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணி விக்கவும்.

Thursday 20 September 2018

உஜ்ஜயினி மகாளியம்மன் கோவில் - தஞ்சாவூர்

உஜ்ஜயினி மகாளியம்மன் கோவில் - தஞ்சாவூர்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களுள் ஒன்று, தஞ்சாவூர் உஜ்ஜயினி மகாளியம்மன் ஆலயம். வெளியூரில் இருந்து ஒரு குடும்பத்தார் வண்டி கட்டிக்கொண்டு, வணிகம் செய்வதற்காக தஞ்சாவூர் வந்துள்ளனர். அவர்களுடன் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியும், அவளது அண்ணனும் இருந்தனர். தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தின் அருகே ஒரு குடிசையில் அந்த குடும்பத்தார் தங்கினர். அனைவரும் வெளியில் சென்ற நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள்.

சிறிது நேரத்திற்குப்பிறகு வெளியே சென்ற அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. வெளியில் இருந்து அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அனைவரும் கதவை உடைத்தனர். அப்போது உள்ளே சிறுமி ஒரு சிலையாக காட்சியளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, அங்கு ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினர். இந்த ஆலயத்தில் உள்ள அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்தவளாகவும், மக்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவளாகவும் இருக்கிறாள். விழாக்களின்போது அதிக எண்ணிக்கையில் முளைப்பாரி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், பால் குடம் தூக்குதல், பொங்கல் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகிறார்கள்.

ஆலயத்தின் நுழைவு வாசலில் நுழைந்ததும், உள்ளே மூலவர் கருவறைக்கு முன்பாக பலிபீடம், கொடி மரம், சிங்கம், சூலம் ஆகியவை உள்ளன. கோவிலைச் சுற்றி வரும்போது ஏனாதிநாத நாயனார், சிவதுர்க்கை, கல்யாண கணபதி, அய்யப்பன், அனுமன் ஆகியோரைக் கண்டு தரிசிக்கலாம். திருச்சுற்றில் உள்ள வேப்ப மரத்தின் அருகே நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடுத்தபடியாக நவக்கிரகங்களும் காட்சிதருகின்றன.

மூலவர் சன்னிதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில், சாந்த சொரூபியாக கிழக்கு பார்த்த நிலையில் காட்சி தருகிறார். மூலவர் சன்னிதியின் இருபுறமும் செல்வ விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் அமைந்துள்ளனர். பக்தர்களின் பிரார்த்தனைகளைத் தீர்த்துவைத்து வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வைக்கிறாள், உஜ்ஜயினி மாகாளியம்மன். தஞ்சாவூரில் இக்கோவில் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது.

Wednesday 19 September 2018

கிருஷ்ணன் துளசி மாலை அணிவது ஏன்?

கிருஷ்ணன் துளசி மாலை அணிவது ஏன்?

கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். 

வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, நம் முன்னோர்கள் வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.

முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்

முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அழகுடன் காட்சியளிக்கும் அற்புதமான இடம்தான் ‘பண்பொழி’. இங்குள்ள திருமலை குமரன், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலைவன். பெரும்பாலுமே தெய்வத்தினை தனது தந்தையாக, தாயாக போற்றி வணங்குவது தான் வழக்கம். ஆனால் திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள். பண்பொழி மலை அடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டலில் அடங்கி அருள்தரும் அற்புத பெண் சித்தரான இவரின் அற்புதங்கள் மிகச்சிறப்பானவை. பெண் சாது ஒருவர் அடங்கிய இடத்தில் அருள் தேடினால், அங்கு பல நூறு மடங்கு அருள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

திருமலை குமரன் திருக்கோவில் சிறப்பாகவும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு சிவகாமி பரதேசியம்மையார் தான் காரணம் என்றால் மிகையல்ல. பண்பொழி திருமலை முருகனை பற்றி பேசும் போதெல்லாம், சிவகாமி பரதேசியம்மையாரை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. செல்வச் செழிப்பாக பிறந்து வளர்ந்து, அனைத்தையும் துறந்து, முருகப்பெருமானுக்காக பரதேசி வேடம் பூண்டு, அருளாட்சி புரிந்தவர் அந்த பெண் சித்தர்.

பண்பொழி என்பது மிகவும் விசேஷமான ஊர். இவ்வூரில் தான் அருணகிரிநாதருக்கு பண் (பாடலை) பொழிய ஆசி வழங்கினார், முருகன். எனவே இத்தலம் ‘பண்பொழி’ எனப் பெயர் பெற்றது. இந்நகருக்கு அருகாமையில் உள்ள பெரும் ஊர் ‘அச்சன் புதூர்’. இவ்வூரில் பெரும் நிலக்கிழராக வாழ்ந்து வந்தவர் கங்கை முத்து தேவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பெரும் நிலக்கிழாரான சிவகாமி அம்மையாரை மணந்தார். மேற்குதொடர்ச்சி மலையில் பல நூறு ஏக்கர் நிலங்களை தன்னகத்தே கொண்டவர்கள் இவர்கள். தங்களின் சொத்தை பராமரிக்க பல வேலையாட்களை வைத்திருந்தனர்.

எல்லா செல்வமும் அவர்களிடம் இருந்தும், குழந்தைச் செல்வம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் மன அமைதி இன்றி தவித்தனர். இதையடுத்து அவர்கள் இறை சேவையில் இறங்கினர். பாத யாத்திரிகர்களுக்கு திருப்பணி செய்தனர். அச்சன்புதூர் அருகில் பல கல் மண்ட பங்களை அமைத்து, அதில் வழிபோக்கர்கள் தங்கி செல்ல வழிவகுத்தனர். தெய்வ பக்தி, அடியார் களை அன்புடன் உபசரிப்பது முதலான அறச் செயல்களை கணவரின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக செய்து வந்தார் சிவகாமி பரதேசியம் மையார்.

நெடுவயல் கிராமத்திலும் அடியார்கள் தங்கி செல்வதற்காக, கல் மண்டபத்தைக் கட்டிவைத்தார்கள். அந்த மண்டபத்தில் தான் ‘வாலர் மஸ்தான்’ எனும் இஸ்லாமியத் துறவி ஒருவர் வந்து தங்கினார். அவர் தவ வலிமையில் சிறந்தவர். சித்து விளையாட்டுகளிலும் வல்லவர். தன் இடத்தைத் தேடி வந்த அந்தத் துறவிக்கு, அன்போடு பணிவிடை செய்து அன்னமிட்டு உபசரித்து வந்தார், சிவகாமி பரதேசிம்மையார்.

இந்த செயல் உறவுக்காரர்களுக்கு பிடிக்க வில்லை. ‘குழந்தை குட்டி இல்லை. இருக்கிற சொத்துகளை இப்படி வாரி இறைத்தால், இறுதியில் பிச்சைதான் எடுக்கவேண்டும். இருக்கும் சொத்து களை நமக்காவது கொடுத்தால், நம் பிள்ளைக் குட்டிகளாவது நல்லா இருக்கும். அதையும் செய்யாமல் இப்படி பணத்தை வர்றவனுக்கும், போறவனுக்கும் வாரிக் கொடுக்கிறார்களே' என அங்கலாய்த்தனர்.

அதோடு நில்லாமல், சிவகாமி பரேதசியம் மையார் மீது வீண் பழி சுமத்தி வீட்டோடு உட்கார வைத்து விடவும் முடிவு செய்தனர். அதன்படி சிவகாமி பரதேசியம்மையாரின் கற்பு நெறி வாழ்க்கைக்கு களங்கம் கற்பித்தனர். இதைப் பொறுக்க முடியாத அம்மையார், ‘நான் கற்புநிலை தவறாதவள், களங்கமற்றவள் என்றால், நான் தெருவின் மேலக்கோடியில் திரும்பும் முன், என்னை பழித்து பேசியவரின் வீட்டில் இடி விழட்டும்' என்று சாபமிட்டார். அதன் பின் அங்கிருந்து அவர் கிளம்பினார்.

அவர் சாபமிட்ட காலம் கோடைகாலம். சுட்டெரிக்கும் வெயில் காலை 9 மணிக்கே வந்து தெருக்களை வறுத்தெடுத்தது. ஆனாலும் அம்மை யின் சபதம் ஏற்று, வருண பகவான் வெகுண்டு எழுந்தான். திடீரென்று மின்னலும், இடியும் தோன்றியது. மறு நொடியே அம்மையாரை பற்றி தவறாக பேசியவர் வீட்டில் இடி விழுந்தது. எனவே அவரைப் பற்றி புறம் பேசியவர்கள், அவரது சக்தியைக் கண்டு அமைதி அடைந்தனர். பலரும் அவரை வணங்கத் தொடங்கினர்.

ஆனால் சிவகாமி பரதேசியம்மையின் மனமோ அமைதி இன்றி தவித்தது. ‘தனக்கு குழந்தை இல்லாதது தானே பெரும் குறை. இது பற்றி மஸ்தானிடம் கேட்போம்' என கல் மடத்துக்கு கணவருடன் சென்றார்.

மஸ்தான், ‘தாயே! நீயோ தெய்வப்பிறவி. உனக் கென்று குழந்தைபேறு ஏது? உனக்கு தென்திருமலை அடிவாரத்தில் அகத்தியருக்கே தமிழ் போதித்த முருகக் கடவுளே மகனாய் கிடைப்பான்' என அருளினார்.

‘ஐயா! என் குழந்தை எங்கே இருப்பான்? எனக்கு எப்படி கிடைப்பான்?' என சிவகாமி அம்மையார் கேட்டார்.

‘கவலைப்படாதே.. பண்பொழி மலை அடிவாரத் தில், நீ செல்லும் இடத்தில் ஒரு பொட்டல் காடு உண்டு. அதன் மேலே வண்டு ஆடிக்கொண் டிருக்கும். அங்குதான் முருகன், குழந்தையாய் உன் கையில் கிடைப்பார்’ என அருளினார்.

தம்பதியினர் அங்கிருந்து கிளம்பினர். தங்களோடு சிறு குழந்தையில் இருந்து உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த சங்கிலிமாடன் என்பவரையும் உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினர்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது. அவ்விடம் பெரும் பொட்டல்காடாக இருந்தது. அதில் கரும் வண்டு ஒன்று ரீங்காரமிட்டு வட்டமிட்டது. அதன் அருகே உள்ள குளக்கரையில் முருகன், குழந்தையாக கிடந்தார். அவரின் அழுகுரல் கேட்டு அருகே ஓடிச்சென்று அந்த குழந்தையை தழுவி தன் மார்போடு அணைத்து ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வை,

‘மகனே யென்றம்மை தானும்
மார்பொடு சேயைச் சேர்த்து
முகத்தோடு முகத்தை வைத்து
முத்தமிட்டணைத்துக் கொண்டு
மகனே யென்றழைத்தபோது
மார்க்கண்டன் ஒடுங்கி நெஞ்சம்
பகவனை சேர்ந்த ணந்த
பான்மைபோல் இருந்த தைய’

என அச்சன்புதூர் கவிஞர் சுப்பையா, தனது ‘சிவகாமி அம் மையார் கவிதை வரலாறு' நூலில் நெஞ்சம் நெகிழ குறிப்பிடுகிறார்.

குழந்தையாக இருந்த முருகப்பெருமான், திருமலை முருகனாய் சிவகாமி அம்மைக்கு காட்சி தந்து, அதன் பின் திரு மலையில் மறைந்தார். முருகன் வண்டாடிய பொட்டலில் கிடை த்த காரணத்தினால், இவ்வூரு க்கு ‘வண்டாடும் பொட்டல்’ என பெயர் விளங்கியது.

முருகன் மறைந்த திருமலை என்னும் பைம்பொழில் சிறப்பு பெற்ற மலை. அக்காலத்தில் முள்செடிகளும் மூங்கில் புதர்களும் நிறைந்த காட்டுப் பகுதியாக கிடந்தது. அது போதாதென்று கொடிய காட்டு விலங்குகளும் அங்குச் சுற்றித் திரிந்தன. எனவே பகல் நேரத்தில் கூட அங்கே செல்ல மக்கள் அச்சப்பட்டனர். ஆனால் சிவகாமி பரதேசியம்மையார், எதையுமே லட்சியம் செய்யாமல் மலை மீது ஏறினார். மலைக்கு மேல் அருள்பாலித்த திருமலைக்குமார சுவாமியை தரிசித்தார்.

சிறப்பு மிக்க அந்த தெய்வத்தையே, மகனாக பெற்றதை எண்ணி மகிழ்ந்த சிவகாமி பரதேசியம் மையார், அந்த ஆலயத்திற்கு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்காக வண்டாடும் பொட்டலில் மடம் அமைத்தார். திருப்பணி தொடங்கியவுடன் பரதேசியம்மையாரின் வடிவமும் மாறியது. காவி உடுத்தினார். கழுத்தில் ருத்ராட்சம் தரித்தார். கரங்களில் வேலாயுதமும் கமண்டலமும் கொண்டு, நெற்றியில் திருநீறும் குங்குமமும் அணிந்து திருமலை குமரனுக்கு சேவையைத் தொடங்கினார்.

யாத்திரியர்களுக்குத் தினமும் உணவு வழங்கினார். கோடை காலத்தில் நீர் மோர், பானகம் வழங்கினார். தான் தொடங்கிவைத்த திருப்பணிகள் நிலையாக நடைபெற, ஏராளமான நன்செய் நிலங்களையும் மானியமாக்கி வைத்தார். மலையின் மேலே உள்ள வசந்த மண்டபம் திருப்பணி தொடங்கியது. ஏறத்தாழ 500 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையில் பணியை தொடங்கினார். இதற்காக முருகன் அடிமைகளை அழைத்தார். தற்போது போல அப்போது படிகளும் கிடையாது. வாகனங்கள் ஏறிச்செல்ல வழியும் கிடையாது. செல்லும் வழியில் கால் வைக்க மட்டுமே பாறையில் சிறு சிறு குழி இருக்கும். அதன் வழியாகத்தான் பாறைகளை தூக்கிச் செல்ல வேண்டும்.

சிவகாமி பரதேசி அம்மையார் நினைத்திருந்தால் திருமலையை குடைந்து கூட, முருகப்பெருமான் ஆலயத்தை அமைத்திருக்க முடியும். ஆனால் ‘இது தன் புதல்வன் மலை. இம்மலைக்கு பங்கம் எதுவும் ஏற்படக்கூடாது’ என்பதற்காக, வேறு இடங்களில் இருந்து கற்களைக் கொண்டு வந்தார்.

மலை உச்சிக்கு தன்னோடு வேலை செய்யும் ஊழியர்களோடு, அம்மையாரும் தலைச்சுமையாக கற்களை தூக்கிச் சென்றார். நடந்து கூட செல்லமுடியாத இடத்தில் பாறைகளை முதுகில் தூக்கி கொண்டு, மேலே கொண்டு சென்றவர் களிடம் இருந்து நழுவி விழும் பாறைகளை தனது தலையால் தடுத்து, பின் தூக்கிச் சென்றும் திருப்பணி செய்தார். அதற்கு அவரது தெய்வ சக்தி ஒத்துழைத்தது. சில நேரங்களில் பாறைகளை கயிறு கட்டி இழுத்த போது, தனது தலைமுடியை சேர்த்துக்கட்டி பாறை களை மேலே இழுத்துச் சென்றுள்ளார். இப்படித்தான், திருமலையில் வசந்த மண்டபம் உள்பட பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் கோவில் தெப்பக்குளத்தை முழுவதுமாக தூர்வாரி, அதை செம்மைப்படுத்தும் பணியையும் மிக கச்சிதமாக செய்து முடித்தார். தற் போதும் கோயில் மலை உச்சியில் அழ காகக் காட்சி தரும் அந்த தெப்பக்குளம், சிவகாமி பரதேசி அம்மையார் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது.

அம்மையார் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையிலும், திருச்செந்தூர் செல்வது வழக்கம். அங்கு முருகப் பெருமானை தரிசித்து விட்டு நடைபயண மாகவே பண்பொழிக்கு திரும்ப வந்துவிடுவார்.

ஒரு நாள் செந்தூரில் ஆடிவரும் முருகப் பெருமானின் தேரை பார்த்தார். அவன் அழகு முகத்தைக் கண்டு ஓடோடி அருகில் சென்றார். தேரின் வடத்தினை பிடித்து இழுத்தார்.

‘யார் இது.. பெண் பரதேசி. தூரப்போ' என தடுத்தார் ஒருவர். கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அம்மையார்.

‘என் மகன் தேரை நான் வடம்பிடித்து இழுக்கக் கூடாதா? ‘முருகா! நீ என் மகன் தான் என்றால், இந்தத் தேர் நகரக்கூடாது' என ஆணையிட்டு விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டார்.

தேர் நகர்ந்ததா?

திருமலையை ‘பிரணவத்தின் மலை’ என்றும் கூறுவார்கள். பிரணவத்தின் வடிவான ‘ஓம்’ என்ற வடிவில் இம்மலை இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. ‘அகத்தியம்’ என்னும் முதல் தமிழ் இலக்கண நூலை அருளியவர் அகத்தியர். அவருக்கும் தமிழ் போதித்தவர் முருகப்பெருமான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தான், ஓம் வடிவில் அமைந்த பண்பொழி திரு லையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து அகத்தியர் வணங்கினார் என்று கூறுகிறார்கள். மேலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அகத்தியர் அமைத்தார். 

இந்த பூஞ்சுனையில் ஞாயிறு, திங்கள், அக்கினி ஆகிய மூவர் பெயராலும் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். இக்குழியில் எப்போதும் நீர் நின்று கொண்டிருக்கும். இந்த குழியில் நீர் குறைந்து விடுமானால் உடனே மழை பொழிந்து குழியும், சுனையும் நிறைந்து விடும் என்பது ஐதீகம். இச்சுனையில் நாள்தோறும் குவளைப்பூ ஒன்று பூக்கும். அப் பூவினைக் கொண்டு, சப்த கன்னியர்கள் முருகனை வழிப்பட்டு வந்திருக்கிறார்கள்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பூவன் பட்டர் என்பவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் அருகில் உள்ள மூங்கில் காட்டு புதரில் புதையுண்டு கிடக்கிறேன். நான் இருக்கும் இடத்தை எறும்புகள் கூட்டம் கூட்டமாக வந்து அடையாளம் காட்டும். என்னை எடுத்து வந்து திருமலையில் பிரதிஷ்டை செய். நான் அனைத்து மக்களுக்கும் காக்கும் தெய்வமாக இருப்பேன்’ என்று கூறினார்.

அதன்படி மறுநாள் பூவன் பட்டர் மூங்கில் காட்டுக்குள் சென்றார். அங்கு எறும்புகள் அடையாளம் காட்டும் இடத்தில் முருகனை கண்டெடுத்து திருமலையில் பிரதிஷ்டை செய்தார். அது முதல் திருமலை குமரன் காக்கும் தெய்வமாக இருந்து அருள் வழங்கி வருகிறார்.