Saturday 14 September 2019

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை


* காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நற்பணிகளில் ஈடுபட்டு வாழ்வை பயனுள்ளதாக்குங்கள். மற்றவர் பேச்சை பொருட்படுத்தாதீர்கள். உங்களின் மனதிற்கு நல்லவராக இருந்தால் போதும்.

* முடிந்தளவு பிறருக்கு உதவி செய்யுங்கள். ஆனால் யாரிடமும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். அன்றாடம் துாங்கும் முன் அரை நிமிடமாவது யோசியுங்கள். தவறை திருத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

* தர்மவழியில் வாழ்வதே நல்ல வாழ்க்கை. ஆசைகளில் சிக்கினால் அது பாவத்தில் தள்ளி விடும்.

* ஒரு தொண்டனைப் போல ஆன்மிகத்தில் ஈடுபடுபவன் சேவை தவிர மற்றதை சிந்திக்க மாட்டான்.

* பக்தி என்னும் பண்பு இல்லாவிட்டால் மனிதன் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போவான்.

* தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைப்பவன் எல்லா மேன்மையும் அடைவான்.

* படிப்பு, பணம், புகழ் என எல்லாம் இருந்தாலும் ஒழுக்கம் இல்லாவிட்டால் பயன் உண்டாகாது.

* ஓடும் நதி இறுதியில் கடலைச் சேரும். மண்ணில் பிறந்த உயிர்கள் கடவுளைச் சென்றடையும்.

* உண்பது மட்டுமே வாழ்க்கையல்ல; நாக்கை கட்டுப்படுத்துங்கள். எல்லாம் தானாக அடங்கி விடும்.

* கர்வத்தால் சொல்லும், செயலும் முரண்படும். அடக்கத்தால் சொல்லும், செயலும் ஒன்றுபடும்.

* உலகம் என்னும் சத்திரத்திற்கு கடவுளே உரிமையாளர். யாரும் இதை சொந்தமாக்க முடியாது.

* சத்திரத்தில் சில நாள் தங்கும் பயணி போல, மனிதனுக்கு உலக வாழ்வு சில காலம் மட்டுமே.

- சாந்தானந்தர்

No comments:

Post a Comment