Tuesday 30 October 2018

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மர்

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மர்

ஓசூரில் இருந்து தர்மபுரி வரை 30 லட்சுநரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. இதில் 8 ஆலயங்கள் மிக பழமையான தொன்மை சிறப்பு கொண்டவை. இந்த ஆலயங்களுள் ஓசூரில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் அத்திமுகம் என்ற ஊர் அருகே உள்ள நரசப்புரம் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயம் தனித்துவம் கொண்டது. இந்த ஆலயம் சுமார் 1500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். 

இந்த ஆலயத்து நரசிம்மர் சம்மத நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் இவர் மிகுந்த சிறப்பு வாய்ந்தவர். இவரிடம் மிக எளிதில் பக்தர்கள் செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். இவர் மனது வைத்தால்தான் இந்த தலத்திற்கு செல்ல முடியும்.

இந்த தலத்தில் சுவாதி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தால் வேண்டியதை தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக திருமணம் கைகூடும் தலமாக இது திகழ்கிறது. ஓசூரில் இருந்து இந்த கோவிலுக்கு 48, 33 ஆகிய எண்கள் கொண்டு டவுண் பஸ்கள் செல்கின்றன.

No comments:

Post a Comment