Friday 30 August 2019

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுவது ஏன் ?


பொதுமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாகக் கொண்டு, நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று பின்பற்றப்பட்டு வருகிறது. 

கோவில்களில் இருந்து கும்பாபிஷேகம் வரை அனைத்திலும் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் நமது முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். ஊர் நடுவில் இருக்கும் கோவிலின் கலசங்கள் இடிதாங்கியாக பலனளித்து வந்திருக்கிறது. 

கலசமும் அதனுள் இருக்கும் தானியங்களும் இந்த நலனை அளித்து வந்துள்ளது. இவற்றின் சக்தி 10 லிருந்து 12 ஆண்டுகளுக்குள் குறைந்து விடும். அதனால்தான் இந்த இடைப்பட்ட காலம் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் என்ற பெயரில் அவற்றை மாற்றி வந்துள்ளனர். 

அதேபோலத் தான் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பதும். ஆற்றில் நீர் தங்க வேண்டும் என்றும், நிலத்தடி நீர் ஆதாரம் பெறுக வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் தான் இது. ஆடிபெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை கரைத்துக்கொண்டு போய்விடும். அதனால் அவ்விடத்தில் நீர் நிலத்தில் இறங்காமல் ஓடி கடலை சென்றடைந்துவிடும். அதனால் தான் குறிப்பிட்ட ஆடி மாதம் முடிந்து அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாத சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர் வந்துள்ளனர் நம் முன்னோர்கள். 

ஆற்றில் நீர் தங்கிடவும், களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும் நோக்கதுடனும் செய்யப்பட்டது தான் களிமண் விநாயகர் சிலைகள். அதனால் தான் விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். ஆனால் ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்க வேண்டும். 

ஈரமான களிமண் சீக்கிரமாக கரைந்து நீரின் வேகத்தோடு அடித்துச் செல்லப்படும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிய தங்கிவிடும். நிலத்தடிநீர் அதிகரிக்கும். இதனால் ஆற்றில் வரும் நீரானது, பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையை தீர்க்கும். இதனால்தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்துள்ளனர். 

ஆனால் இன்று ஏன்? எதற்கு? என்று தெரியாமல் கடலில் விநாயகர் சிலைகளை வீணாய் கரைத்து வருகின்றனர். மேலும், இப்பொழுது சாயம் வண்ணங்கள் சேர்த்து உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் மாசுபடுகிறது. மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு காரியம் இன்று அந்த மக்களுக்கே தீங்காக அமைகிறது என்பது வருத்தத்திற்குரியது.

No comments:

Post a Comment