Saturday 31 August 2019

சனி தோஷம் இனி இல்லை


சனி தோஷத்தில் இருந்து விடுபட மதுரை மாவட்டம் திருவாதவூர் வேதபுரீஸ்வரரை தரிசியுங்கள். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த தலமாகும்.

தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களையும், அசுரகுருவான சுக்ராச்சாரியாரின் தாயாரையும் மகாவிஷ்ணு கொன்றார். இப்பாவத்தைப் போக்க ஒரு குளமாக மாறி சிவனை வழிபட்டார். அங்கிருந்த தாமரை மலரின் நடுவில் வேத நாதம் ஒலிக்க சிவன் தோன்றி பாவம் போக்கினார். இவரே 'வேதபுரீஸ்வரர்' என்னும் பெயரில் இங்குள்ளார். பிரம்மா ஒருமுறை யாகம் நடத்த, அம்பிகை காட்சியளித்து படைப்புத் தொழில் சிறக்க அருளினாள். அவளே 'ஆரணவல்லி' என்னும் பெயரில் உள்ளாள்.

மதுரை அரிமர்த்தன பாண்டியரின் அவையில் முதலமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். இவர் வாழ்ந்த வீடு தனி கோயிலாக உள்ளது. ஆவணி மாதத்தில் மதுரையில் நடக்கும் புட்டுத்திருவிழாவில் பங்கேற்க மாணிக்கவாசகர் மதுரைக்குச் செல்வார்.

மகரிஷியான மாண்டவ்யர், ஏழரைச்சனியால் துன்பபட்டதால் சனியின் கால் முடமாகும்படி சாபமிட்டார். இங்கு வழிபட்ட பின்னரே சனி பகவான் விமோசனம் பெற்றார். இதனால் சுவாமிக்கு 'வாதபுரீஸ்வரர்' என்றும் பெயர் உண்டு. இவரை வழிபட்டால் ஏழரை, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். முடக்குவாதம், கை, கால், உடல் வலி உள்ளவர்கள் அபிஷேகம் செய்கின்றனர். கோயிலின் பின்புறம் விஷ்ணு தீர்த்தம் உள்ளது. வாகனத்தை தொலைத்தவர்கள் பைரவருக்கு நெய் தீபம் ஏற்ற பலன் கிடைக்கும்.

விசஷே நாட்கள்: மாணிக்கவாசகர் குருபூஜை, ஆவணி புட்டுத் திருவிழா, மகாசிவராத்திரி, சனி பிரதோஷம்

நேரம்: காலை 6:00 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி 

எப்படி செல்வது: மதுரையில் இருந்து 24 கி.மீ., 

No comments:

Post a Comment