Wednesday 21 June 2017

சிவபெருமானின் நிறம் என்ன ?

சிவபெருமானின் க்கான பட முடிவு

சிவபெருமானின் திருமேனி வண்ணம் பற்றி தேவாரப் பாடல்களில் சில குறிப்புகள் உள்ளன. 

* சுந்தரர், ‘பொன்னார்மேனியனே’ என்று சிவனைப் பொன் போல ஒளிர்பவராக குறிப்பிடுகிறார். 

* திருநாவுக்கரசர், ‘பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறு அணிந்தவர்’ என பவளம் போல சிவந்தநிறம் கொண்டவராகப் பாடியுள்ளார். 

* சம்பந்தர், ‘காடுடையச் சுடலைப் பொடி’ என்னும் சுடுகாட்டுச் சாம்பலைப்பூசியதால், வெண்ணிறம் கொண்டவராகச் சித்தரிக்கிறார். 

* பாற்கடலில் எழுந்த விஷத்தைக் குடித்ததால், கழுத்தில் மட்டும் சிவன் நீலநிறம் கொண்டிருப்பார். இதனால் இவருக்கு ‘நீலகண்டன்’ என்று பெயருண்டு. 

No comments:

Post a Comment