Thursday 29 June 2017

ஆடு பலியிடும் வழக்கம் எவ்வாறு வந்தது தெரியுமா ?

தொடர்புடைய படம்

அஜம் என்ற சமஸ்கிருதச் சொல்லே, கோயில்களில் ஆடு பலியிடும் வழக்கத்திற்கு காரணமாக அமைந்து விட்டது. அஜம் என்றால் ஆடு என்ற பொருள் இருக்கிறது. ஒரு காலத்தில் அஸ்வமேதயாகம் செய்த போது குதிரையை பலியிட்டார்கள். அஸ்வம் என்றால் குதிரை. எரியும் யாகநெருப்பில் குதிரையைத் தள்ளி விட்டு விடுவார்களாம். இதேபோல் தான் அஜம் என்ற வார்த்தைக்கு உரிய பொருளையும் பயன்படுத்தி ஆடு பலியிடும் வழக்கம் வந்தது. அஜம் என்ற சொல்லுக்கு முளைக்காத பழைய நெல் என்ற பொருளும் உண்டு. இதை யாககுண்டத்தில் கொட்டுவது வழக்கம். இதையே அஜமுகி (கந்தபுராணத்தில் வரும் சூரபத்மனின் தங்கை, ஆடு முகம் கொண்டவள்) போன்ற வார்த்தைக் குழப்பங்களால் ஆடாக மாற்றி, ஆடு பலியிடும் வழக்கத்திற்கு மாறி விட்டனர் என்று சில மகான்கள் சொல்கின்றனர்.

No comments:

Post a Comment