Tuesday 20 June 2017

கடன் தொல்லை நீங்க ?

murugan க்கான பட முடிவு


அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் படிப்படியாக கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்: அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். 

செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும். 

ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடை படும்.

அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போதும் யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒருசிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும்.

குளிகை காலத்திலும் கடனை அடைக்கலாம்.

‘கரிநாள்’ என்று சொல்லப்படும் நாட்களிலும் கடன் அடைக்கலாம்.

மரணயோகம் உள்ள நாட்களில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். இதனால் யாரிடம் கடன் வாங்கினோமோ அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் வாங்கவேண்டி வராது.

தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

No comments:

Post a Comment