Thursday 29 June 2017

சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா ?

சித்தர் க்கான பட முடிவு

தெய்வப்படங்களை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் தெய்வத்திடம் வரம் பெற்று நலமாய் வாழவேண்டும் என்பது. மகான்களின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் ஏதாவது சூழ்நிலையில் நாம் தவறு செய்ய முற்படும்போது அவர்களின் அருளுரைகள் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்காக. 18 சித்தர்களும் மனிதநேயமே உருவாக வாழ்ந்தவர்கள். கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் வாழ்வதாகக் கூறுகிறார்கள். தமக்கென எதுவுமே செய்து கொள்ளாமல் பிறருக்குத் தொண்டு செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். அவர்களது கொள்கையைக் கடைபிடிக்க விரும்பினால் தாராளமாக சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள். ஜோதிடம், வாஸ்து, பரிகாரம் என்று கூறி அவர்களைத் தாழ்த்தி விடாதீர்கள்.

No comments:

Post a Comment