Sunday 1 July 2018

அன்னமிட்ட அம்பிகை


ஒரு முறை பார்வதி, தவ வாழ்க்கை மேற்கொள்ள காசிக்கு வந்தாள். அங்கு பஞ்சம் நிலவியதைக் கண்ட அவளது மனம் பொறுக்கவில்லை. தன் தெய்வீக சக்தியால் மாளிகையை உருவாக்கி, அன்ன பூரணியாக அங்கு எழுந்தருளினாள்.அட்சய பாத்திரம், கரண்டி ஏந்திய அவள் மக்களுக்கு உணவளித்தாள். அன்னபூரணியின் புகழ் எங்கும் பரவியது.

இதையறிந்த காசி ராஜன், அரண்மனைக் காவலர்களை அனுப்பி நிலவரத்தை அறிந்தான். காவலர்கள்,“மன்னா! காசி நகர மக்கள் அனைவரும் உணவு பெற்ற பின்னும் அட்சய பாத்திரத்தில் உணவு குறையவில்லை” என்றனர். காசிராஜனும், அவனது அமைச்சரும் மாறுவேடத்தில் வந்து உணவு பெற்றனர். 

அம்பிகையின் முன் நின்ற போது, ''இவள் சாதாரண பெண் அல்ல. ஜகன்மாதாவான பராசக்தி'' என்ற உண்மையை உணர்ந்தான் காசிராஜன். அப்போது அன்னபூரணி, “காசி ராஜனே! வருணனின் உதவியால் காசியில் மழை பொழியும்,” என வாழ்த்தினாள்.

No comments:

Post a Comment