Wednesday 16 May 2018

வள்ளலார் கூறும் பாவங்கள்

வள்ளலார் கூறும் பாவங்கள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், பாவங்கள் என்று 42 வகையான விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார். அதனைப் பார்க்கலாம்.

* நல்லவர் மனதை நடுங்க வைப்பது.

* வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

* தானம் கொடுப்போரைத் தடுப்பது.

* சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

* மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

* குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

* ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

* தருமம் பாராது தண்டிப்பது.

* ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

* உயிர்க் கொலை செய்பவருக்கு உபகாரம் செய்வது.

* களவு செய்பவருக்கு உளவுகள் சொல்வது.

* பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

* ஆசை காட்டி மோசம் செய்வது.

* போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.

* வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.

* பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

* இரப்பவருக்குப் பிச்சை இல்லை என்பது.

* கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

* நம்பியவரை நட்டாற்றில் கை நழுவுவது.

* பயந்து ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

* கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

* காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

* கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

* கருவைக் கலைப்பது.

* குருவை வணங்கக் கூசி நிற்பது.

* குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

* கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.

* பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

* கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

* மாமிசம் உண்டு உடல் வளர்ப்பது.

* கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

* அன்புடையவருக்குத் துன்பம் செய்வது.

* குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

* வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

* பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

* பொது மண்டபத்தை இடிப்பது.

* ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

* சிவனடியாரிடம் சீற்றம் கொள்வது.

* தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

* சுத்த ஞானிகள் மீது அவதூறு சொல்வது.

* தந்தை-தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.

* தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

No comments:

Post a Comment