Thursday 17 May 2018

கருணை உள்ளமே கடவுள் இல்லமே



* இதயத்தில் கடவுளை தேடுங்கள். அங்கு கருணை இருந்தால் அவரது அருள் கிடைக்கும். 
* கடவுளை அடைவதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. உண்மை ஒன்றே ஒரே வழி. 
* நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவிகளே மனிதர்கள்.
* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உயர்ந்த உபதேசமும் கூட.வாயை மட்டும் மூடிக் கொண்டு மனதை அலைபாய விடுவது மவுனம் ஆகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
* மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே ஆன்மிக சாதனையின் நோக்கமாகும்.
* மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். அந்நிலையில் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்பதை உணரலாம். 
* சுயமாக இயங்க முடியாததற்கு காரணம் வலிமையற்ற மனமே.
* குறை எப்போதும் வெளியில் இருக்காது; மனதில் தான் இருக்கிறது.
* அகந்தையை துறந்தால் ஆண்டவனின் அருள் உண்டாகும். 
* தினமும் புதுப்புது ஆசைகளை மனதில் வளர்க்காதீர்கள். மீறினால் தேவையற்ற சுமைகளை சுமக்க நேரிடும்.
* நான் யார் என்பதை அறிந்து கொள்ளவே, மந்திரம், தவம், வழிபாடு எல்லாம் இருக்கிறது.

No comments:

Post a Comment