Sunday 20 May 2018

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி



* கடவுள் என்னும் முதலாளியின் கையில், தேர்ந்த கருவியாக இருங்கள். அவரிடம் தொழிலாளியாக இருந்து பணியாற்றுங்கள். 
* கடவுளை நம் அறிவால் அளக்க முடியாது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவர். 
* விவேகமுள்ள சிறந்த நண்பர் கடவுள் ஒருவரே.
* மனத்துாய்மை பெற கடவுளைச் சரணடைந்து விடு. 
* கடவுளின் கண்ணுக்கு அற்பமானது எதுவுமே இல்லை.
* எண்ணம் அனைத்தையும் கடவுளுக்கு காணிக்கையாக்கு.
* வாழ்வில் இருந்து விலகி ஓடுவது ஆன்மிகம் ஆகாது.
* பயனற்ற வறட்டு வேதாந்த வலையில் சிக்கி விடாதே.
* உன்னை நீயே ஆராய்ச்சி செய்து கொண்டே இரு. 
* பொதுநலத்துடன் வாழ முயற்சி செய்.
* கருணை உணர்வுடன் மனிதர்களுக்குத் தொண்டு செய்.
* நற் செயலை செய்ய நினைத்தால் உடனடியாக செயலில் ஈடுபடு. 
* முழுமை பெற முயற்சிப்பதே வாழ்வின் குறிக்கோள்.
* பயனில்லாத கற்பனைகளை விட்டு விடுங்கள். 
* செல்வம் குறித்த தற்புகழ்ச்சி மிக ஆபத்தானது.

No comments:

Post a Comment