Saturday 26 August 2017

பல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்

Image result for பரிகாரம்

எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும். 

அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் 3மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர அவர்களின் கொட்டம் நிற்கும் 

கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும் 

விலை உயர்ந்த பொருட்களை இழந்து கொண்டே இருந்தால் சனிக்கிழமைகளில்வெளிர் நீல துணியில் எள் உருண்டைகள் வைத்து இரவு நேரத்தில் (8-9) தானம் செய்ய, விரயம் நிற்கும். 

சிலருக்கு சின்ன வயதில் இருந்தே பண கஷ்டம் மற்றும் தொல்லைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்-அப்படிப்பட்டவர்கள் யாரிடமும் இனாமாகவோ அல்லது நன்கொடையாகவோ எதுவும் பெறக் கூடாது. அதே போல் செய்யாத வேலைக்கு பணம் பெறுவது கூடாது. ஒவ்வொரு திங்களும் ஏதேனும் கோவிலில் 5 பாதாம் பருப்புகள் தானமாக வழங்கி வர நிலையில் நிச்சயமான மாற்றம் ஏற்படும். 

உடல் நிலை மற்றும் நீண்ட ஆயுளுக்கு தினசரி ‘ஓம் சாவித்ரி யாயை நமஹ’ மந்திரம் கூறி வர உடலில் முன்னேற்றம் உண்டாகும். 

No comments:

Post a Comment