Tuesday 1 May 2018

பாட்டு வந்ததும் விதை முளைத்தது


மகான் மத்வர், ஒருமுறை கோவா வந்தார். அங்குள்ள மக்களுக்கு சங்கீதத்தின் மீது அலாதி பிரியம். சங்கீதத்தைக் கேட்டு, பயிர்கள் அதிக விளைச்சலை தருகின்றன என்று வேளாண்மைத் துறையினர் சொல்வதை, சாஸ்திர ரீதியாக நம்பினர். பாட முயற்சித்து பயிர் வளராமல் போனால் அவமானம் நேருமே என யாரும் சோதித்து பார்க்க விரும்பவில்லை.  மத்வரிடம் மக்கள் தங்கள் ஆசையைக் கூறினர்.

“ஆச்சாரியரே! சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள இக்கருத்து உண்மைதானா?” என்றனர். “அதிலென்ன சந்தேகம். நமது சாஸ்திரங்கள் சொல்லும் அத்தனையும் உண்மையே. விளைந்த பயிர்கள் மட்டுமல்ல; சங்கீதம் கேட்டு, நம் கையில் வைத்திருக்கும் விதை கூட முளைக்கும்,” என்றார்.

உடனே ஒரு விதை கொண்டு வரப்பட்டது. அதை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, தேனினும் இனிய பாடலைப் பாடினார். ஒரு கட்டத்தில் அந்த விதை அசைந்தது. சற்றுநேரத்தில் முளைவிட்டது. இப்போது புரிகிறதா.. சங்கீதத்தால் பயிரை விளைவிக்கலாம்.

No comments:

Post a Comment