Saturday, 12 August 2017

சந்தனக்காற்றே வா! செந்தமிழ்ப்பாட்டே வா!


சிவனுக்குரிய கைலாயம் வடக்கில் இருந்தாலும், அவர் நடராஜராக ஆடும் போது தெற்குதிசை நோக்கியே ஆடுகிறார். இதற்கு என்ன காரணம் என்பதை திருவிளையாடல் புராணம் எடுத்துச் சொல்கிறது. 

வடக்கு திசை தான் இறைவனுக்கு உரியது என்றாலும், நாட்டியம் ஆடும் போது கை,கால் தொடர்ந்து அசைவதால் உடலில் களைப்பு உண்டாகும். சந்தன மரங்களைத் தழுவியபடி வீசும் பொதிகையின் உச்சியில் புறப்படும் தென்றல் முகத்தில் பட்டால் களைப்பு மறைந்து புத்துணர்வு உண்டாகும் என்பதற்காகவும், தன் செவிகளால் தமிழ் மொழியின் இனிமையைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் சிவன் தெற்கு நோக்கி நடனமாடுவதாக பரஞ்சோதி முனிவர் குறிப்பிடுகிறார்.

பொதிகையின் சந்தனக் காற்றையும், செந்தமிழ்ப்பாட்டையும் சிவனே வரவேற்கிறார் என்றால், இவற்றின் பெருமையை யாரால் எடுத்துச் சொல்ல முடியும்? 

No comments:

Post a Comment