Tuesday 1 August 2017

அழகு முகம் தந்த ஆகாச கங்கை


கோதாவரி நதிக்கரையில் வசித்த கேசவ பட்டர், அவரது தந்தையின் சிராத்த தினத்தன்று முன்னோர் கடன் செய்தார். அப்போது அறிமுகம் இல்லாத அந்தணர் ஒருவர் பட்டர் வீட்டுக்கு வந்தார். அவருக்கு அறுசுவை அன்னமும் தட்சணையும் அளிக்கப்பட்டது. 

அந்தணர் கிளம்பிய சிறிது நேரத்தில், பட்டருக்கு எதிர்பாராத விபரீதம் நிகழ்ந்தது.

அவரின் முகம் மட்டும் கழுதையாக மாறியது.

பயத்தில் அலறிய பட்டர், அகத்திய முனிவரின் ஆஸ்ரமம் நோக்கி ஓடினார்.

முனிவரின் திருவடியில் விழுந்து வணங்கினார். 

நடந்ததை எடுத்துச் சொல்வதற்கு முன்பே, அகத்தியர் ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்தார். 

"இன்று உன் தந்தையின் சிரார்த்த நாளாயிற்றே....'' என்றார் அத்தியர்.

"ஆம் சுவாமி'' என்ற பட்டர் கண்களில் தாரையாக கண்ணீர் வழிந்தது. 

"சிராத்த நாளில், பாவி ஒருவனுக்கு அன்ன மிட்டதால் இத்துன்பத்திற்கு ஆளாகி விட்டாய். இருந்தாலும், உன் கவலை தீர்க்கும் மருந்து திருமலை (திருப்பதி)யில் இருக்கிறது. திருப்பதி மலையிலுள்ள ஆகாச கங்கை தீர்த்தத்திற்கு சென்று நீராடி, ஏழுமலையானைத் தரிசனம் செய். சுயவடிவம் பெறுவாய்'' என ஆசி அளித்தார் அகத்தியர்.

ஆகாச கங்கை தீர்த்த மகிமையால் கேசவ பட்டரும் சுயவடிவம் பெற்றார். திருப்பதி சென்றால் ஆகாச கங்கை தீர்த்தத்திற்கு சென்று தலையில் நீர் தெளித்து வாருங்கள்.

No comments:

Post a Comment