Friday 23 March 2018

பிள்ளை வரம் தந்த சிவன்


காசியிலுள்ள புகழ்மிக்க சங்கட்மாயி கோயிலில், சங்கடங்களைத் தீர்ப்பவளாக அம்பிகை அருள்பாலிக்கிறாள். இக் கோயிலுக்கு அருகில் வீரேஸ்வர் என்னும் சிவன் கோயில் உள்ளது. விவேகானந்தரின் தாய் புவனேஸ்வரி வீரேஸ்வரிடம், 'தனக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும்' என்று வேண்டினார். வேண்டுதல் பலித்ததால் மகனுக்கு 'வீரேஸ்வர்' என பெயரிட்டார். அதற்கு ஏற்ப அவரும் வீரத்துடன் திகழ்ந்தார். பின்னாளில் விவேகானந்தரின் தந்தையார் 'நரேன்' என பெயர் மாற்றம் செய்தார்.

No comments:

Post a Comment