
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் சந்தானராமஸ்வாமி கோயில் வரலாற்றுச் சிறப்புடையதாகும். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்ம மகாராஜாவிற்கு பல காலம் குழந்தைப்பேறு இல்லாமையால் அரசரும் அவரது தேவியார் யமுனாம்பாளும் இத்தல ராமரை வழிபட்டதன் பயனாக புத்திரப்பேற்றை அடைந்தார்கள். அதனால் மன்னன் இக்கோயிலை சிறப்பாக கட்டி 1761ம் ஆண்டு குடமுழுக்கும் செய்தது வரலாறு.
No comments:
Post a Comment