Wednesday 28 March 2018

எப்போதும் நோயாளியாக இருக்கும் கிரகநிலைகள் யாருக்கு?

newplanet

சிலருக்கு நோய்கள் வந்தால், அவை விரைவில் குணமடையும். சிலருக்கு நீடித்துக்கொண்டே இருக்கும். சிலருக்கு ஆயுள் முழுவதுமே நோயினால் தவிப்பார்கள். இத்தகைய நிலையில் ஆரோக்கியமாக இருக்கும் கிரகநிலையையும், எப்போதுமே நோயாளியாக இருக்கும் கிரகநிலையையும் பார்ப்போம். 

நோயிலிருந்து குணமடையும் கிரகநிலைகள்

• 12-க்குடையவன் பலமற்றவனாய் 8-க்குடையவனுடன் சேர்ந்திருந்து, 10-க்குடையவனும் பலம் பெற்றிருந்தால், அந்த மனிதன் நோயற்றவன் ஆகிறான். 

• சந்திரன் சுபருடன் கூடி, 6, 8, 12-ம் இடங்களைத் தவிர்த்து வேறு இடத்திலிருந்து லக்னாதிபதி சுபர் பார்வை பெற்றிருந்தால் தனக்கு வரும் நோயின் வீரியத்தை அறிந்துகொள்ளும் நிலை உண்டாகும். 

• லக்னத்தில் சுபக்கிரகம் இருந்தாலும் சந்திரன் சுபருடன் கூடி கேந்திரத்தில் இருந்தாலும் நோயிலிருந்து விடுபடுவான். 

• 12, 6, 8 4 ஆகிய இடங்கள் பாப சம்பந்தம் பெற்றிருந்து கேந்திரத்தில் சுபரும் இருந்தால் நோயின் வேகம் குறையும். 

• பிரசன லக்னத்திற்கோ, ஜன்ம லக்னத்திற்கோ 7, 8, 9, 5-ம் இடத்தில் சுபக்கிரகங்களோ, சுபரால் பார்க்கப்பட்ட வேறு கிரகங்களோ இருந்து, சந்திரன் 3, 6, 10, 11-ம் இடங்களில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்தால் ரோகம், ஆபத்து இவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் நோய்களில் இருந்து விடுபடுவான். 

• சந்திரன் 3, 6, 10, 11-ம் இடங்களில் இருந்தாலும் 5,9 கேந்திரம் 2-ம் இடத்தில் இருந்தாலும் லக்னம் சுபக்கிரகத்தால் பார்க்கப்பட்டால் நோயில் இருந்து விரைவில் குணமடைவான். 

எப்போதும் நோயாளியாகவே இருக்கும் கிரகநிலைகள் 

• ஆறுக்குடையவன் பாபரின் சேர்க்கையை அடைந்து, செவ்வாய் இராகுவுடன் சேர்ந்திருந்தால் ஜாதகர் எப்போதுமே ஏதேனும் ஒரு நோயின் தாக்கத்திலே இருப்பார். 

• செவ்வாய் 8, 7-ல் இருந்தால் கலகமும், ஜென்ம லக்ன, சந்திர லக்னத்திற்கு 12-ல் இருந்தால் ஜதகருக்கு செலவும் அதிகரிக்கும். 

• லக்னத்திலிருந்து புதனையோ, சந்திரனையோ பாபக்கிரகம் பார்த்தால் உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நோயிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

• லக்னத்தில் பாபரும் இருந்து சந்திரனும் பலமற்றதாக இருந்தால் அந்த மனிதன் நோயிலிருந்து ஏழுந்திருக்கமாட்டான். 

No comments:

Post a Comment