Monday 25 September 2017

விளையாட்டா சேவை செய்யணும்!


கிருஷ்ணன் வேடிக்கை செய்வது போல சேவை செய்தவர். காளிங்கன் என்னும் பாம்பு மக்களைத் துன்புறுத்தியது. இவர் அதன் மேல் ஏறி நடனமாடுவது போல நடித்து அதைக் கொன்று மக்களைக் காத்தார். உரலை இழுப்பது போல் வேடிக்கை காட்டி, மரமாக நின்ற கந்தர்வர்களைக் காத்தார். ஒரு குன்றையே தூக்கி குடை போல் பிடித்து, இந்திரன் தந்த பெருமழையில் இருந்து மக்களைக் காத்தார். விளையாட்டான நிகழ்வாக இருந்தாலும், இதிலுள்ள சேவையின் தன்மையை அளவிட முடியாது. ஒரு வீட்டில் தீட்டு ஏற்பட்டால், அவர்கள் மற்றவர்களோடு ஒட்டாமல் விலகியிருப்பது போல, சேவை செய்யாத ஒவ்வொரு நாளையும் தீட்டுநாளாகக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால் சேவை மனப்பான்மை தானாகவே வந்து விடும். உயிர்களுக்கு செய்யும் சேவை, அம்மையப்பனாக இருக்கிற சிவபார்வதிக்கும், விஷ்ணு லட்சுமிக்கும் செய்ததற்கு சமம். திரு மூலர் தனது நூலான திருமந்திரத்தில், ""மக்களுக்கு செய்கிற உதவி, சாட்சாத் ஈஸ்வரனுக்கு செய்யப்படும் பூஜைக்கு சமம்'' என்கிறார். 

No comments:

Post a Comment