Sunday 24 September 2017

ஆற்றங்கரைகளில் கோயில் எழுப்பப்பட்டது ஏன்?


தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் நதிக்கரைகளில் உள்ளன. வயிற்றுக்குத் தேவை உணவு. நதிக்கரைகளில் இருந்த மக்கள், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாததால் தேவையான அளவு பயிர் விளைவித்தனர். உணவுக்கு அவர்கள் கஷ்டப்பட்டதில்லை. எனவே, உயர்ந்த எண்ணங்கள் இயற்கையாகவே அவர்கள் மனதில் எழுந்தது. அதன் விளைவாக இறைவழிபாடு அதிகரித்தது. கோயில்கள் ஏராளமாக எழுப்பப்பட்டன. ஏற்கனவே இருந்த கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டன. உதாரணத்துக்கு காவிரிக்கரையில் தான் கோயில்கள் அதிகம். அன்றைய சோழ ஆட்சியில் தான் கோயில்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. அப்பர், சம்பந்தர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 274ல் 190 காவிரிக்கரையில் உள்ளது. ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 40 காவிரிக்கரையில் இருக்கிறது.

No comments:

Post a Comment