Monday 25 September 2017

அலங்காநல்லூர் பெயர்க்காரணம்


ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்கா நல்லூருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?திருமலை நாயக்க மன்னர் காலத்துக்கு முன்னதாக அழகர் திருவிழா தேனூர் என்ற கிராமத்தில் நடந்தது. அவர் அழகர்கோவிலில் இருந்து தேனூர் வரும் வழியில் ஓரிடத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் அவ்வூர் "அலங்காரநல்லூர்' எனப்பட்டது. அதுவே "அலங்காநல்லூர்' ஆனது. தேனூரில் ஓடும் வைகை ஆற்றில் அழகர் இறங்கிக் கொண்டிருந்தார். ஆற்றுக்குள் இருந்த மண்டபத்தில் தங்கிய அழகர், ஒரு சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக மகரிஷிக்கு விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமலை நாயக்கர் அழகர் விழாவை மதுரைக்கு மாற்றியதும், தேனூரில் இருந்தது போன்ற மண்டபத்தை மதுரை வைகையில் கட்டி, மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் வைபவத்தை நடத்த ஏற்பாடு செய்தார்.

No comments:

Post a Comment