கஷ்டம் வந்து விட்டதா? மனிதர்களின் காலில் விழுந்து பலனேதும் இல்லை. கடவுளின் திருவடியை நம் இருகைகளாலும் பற்றிக் கொள்வதே சிறந்த சரணாகதி. "நீ தான் எனக்கு கதி' என்று கெட்டியாக இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அவதாரத்திலும் இறைவனுக்கு எத்தனையோ முகங்கள், கைகள், ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், அவருக்கு பாதங்கள் (கால்கள்) என்னவோ இரண்டு மட்டும் தான். ஏனென்றால், அவரை வணங்கும் நமக்கு இரு கைகள் மட்டுமே. சரணாகதி அடைய வரும் அன்பர்கள் தன் இருகைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற கருணையோடு இருதிருவடிகளைத் தாங்கி நிற்கிறார். இதனையே, "அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்று இறைவனின் திருவடியின் பெருமையை குறிப்பிடுவது வழக்கம்.
Saturday 30 September 2017
திருவடிகளை பற்றட்டும் கைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment