"நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்' என்று எட்டெழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணாய' என்பதை, நமக்கு தெரியப்படுத்துகிறார் திருமங்கையாழ்வார். இம்மந்திரத்தை ஜெபிப்பவர்கள் நல்ல குடிப்பிறப்பு, வளமான செல்வ வாழ்வு பெற்று வாழ்வர். வாழ்வில் நேரும் துன்பம் அனைத்தும் நீங்கும். நீள்விசும்பு என்னும் சொர்க்கத்தில் வாழும் பேறு கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். பெற்ற தாயை விட நமக்கு உற்ற துணையாக அவனே முன்நிற்பான். நல்ல குடிப்பிறப்பு என்றால் அவரவர் பிறந்த ஜாதியை இங்கு ஆழ்வார் குறிப்பிடவில்லை. "திருமாலின் அடியவர்கள் நாங்கள்' என்று பெருமைப்படும் பக்தர் குலத்தோடு நம்மைச் சேர்ப்பார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், "நாராயணா என்னா நாவென்ன நாவே! திருமால் புகழ் கேளா செவி என்ன செவியே' என்கிறார்.
Saturday 30 September 2017
நல்லதை காதுகள் கேட்கட்டுமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment