மனிதனின் எதிர்கால வாழ்க்கையை அறிய ஜோதிடம் வழிகாட்டுகிறது. ஒருவரின் ஜாதக பலன்களை நவக்கிரகங்களின் இருப்பிடத்தைக் கொண்டே கூறுவர். இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு என்று மனிதவாழ்வின் அனைத்து நிலைகளிலும் கிரகங்களின் பெயர்ச்சிகளாலேயே ஒருவருக்கு ஏற்படுகின்றன. இந்த நவக்கிரகங்கள் ஒன்பதிலும் நாயகனாக திகழ்பவர் சூரியனே. சூரியனை நட்சத்திரங்களில் ஒன்று என்று அறிவியல் கூறுகிறது. ஆனால், ஜோதிடத்தில் சூரியன் கிரகமாகக் குறிக்கப்படுகிறார். ராசிகளில் சிம்மத்தின் அதிபதியாக இருக்கும் சூரியன், மேஷராசியில் செல்லும் போது உச்சபலத்தை பெறுகிறார். இக்கால கட்டத்தையே "அக்னி நட்சத்திரம்' என்று குறிப்பிடுவர். சூரியனின் நிலையைக் கொண்டே ஒருவரின் ஆரோக்கியம், ஆன்மிகபலம் ஆகியவற்றை அறியமுடியும். குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் சூரியனுக்கு நெருங்கிய நண்பர்களாவர். இக்கிரகங்களை சூரியன் பார்த்தாலோ, சேர்ந்திருந்தாலோ வாழ்வில் நற்பலன்கள் உண்டாகும்.
Friday 22 September 2017
ஒன்பதில் நம்பர் ஒன் சூரியனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment