Thursday 28 September 2017

இவரை வணங்கினால் தலைதப்பும்


ஆந்திரா, ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்து விட்டு சங்கரர் வந்து கொண்டிருந்தார். அவரை காபாலிகன் (மந்திரவாதி) ஒருவன் கண்டான். அவன் உக்ர பைரவரின் அருள்பெறுவதற்காக யாகம் நடத்திக் கொண்டிருந்தான். பூரண ஞானம் நிறைந்த சந்நியாசியைப் பலியாக யாகத்தீயிலிட்டால் தனக்கு அருள் கிடைக்குமென சங்கரரிடம் தெரிவித்தான். சங்கரரும் சம்மதம் தெரிவித்தார். ""எனது சீடர்கள் யாரும் இல்லாதவேளையில், தலையை வெட்டிக்கொள்ளும்படி கூறினார். இதை ஞானதிருஷ்டியால் அறிந்த அவரது சீடர் பத்மபாதர், நரசிம்ம மந்திரத்தை ஜெபித்து விஷ்ணுவை தியானித்தார். உடனே நரசிம்ம மூர்த்தி பத்மபாதர் உடலில் புகுந்து ஆவேசமானார். கர்ஜனையோடு காபாலிகனை ஒருநொடியில் கொன்று அழித்தார். உடனே ஆதிசங்கரர் லட்சுமி நரசிம்மர் மீது "கராவலம்ப ஸ்தோத்திரம்' பாடினார். 

No comments:

Post a Comment