காசியில் எழுந்தருளி இருக்கும் விஸ்வநாதர் பாணலிங்கமாகவும், ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் ராமலிங்கம் மணல் லிங்கமாகவும் காட்சி தருகின்றனர். இறக்க முக்தி (பிறப்பற்ற நிலை) காசியிலும், தரிசிக்க முக்தி ராமேஸ்வரத்திலும் கிடைக்கும். ராமாயணத்திற்கும், காசிராமேஸ்வரத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. ராமேஸ்வரத்தில் அனுமலிங்கத்திற்கே முதல் மரியாதையும், பூஜையும் நடத்துவர். இந்த லிங்கத்திற்கு "காசிலிங்கம்' என்றும் பெயருண்டு. ராமபிரான் பூஜித்ததால் அவருடைய பெயரால் மூலவரை "ராமநாதர்' என்று அழைக்கின்றனர். காசியில் ஒவ்வொருநாளும் இரவும் நடைபெறும் சப்தரிஷிபூஜையின் போது ஏழுபண்டாக்கள் பூஜை செய்வர். அப்போது "ராம்' என்று பொறிக்கப்பட்ட தங்கத்தாலான வில்வஇலைகளால் விஸ்வநாதருக்கு அர்ச்சனை செய்யப்படும். காசியில் இறக்கும் உயிர்களின் காதில், "ராமா' என்று, சிவபெருமானே ஜெபித்து மோட்சம் அளிப்பதாக ஐதீகம். காசி யாத்திரை, ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாதரைத் தரிசித்த பின்னரே நிறைவு பெறுகிறது. 2000 மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்விரு தலங்களையும் சேர்த்து "காசி ராமேஸ்வரம்' என்று சொல்லும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
Wednesday 27 September 2017
வில்வத்தில் "ராம்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment