கங்கைக் கரையில் உள்ள புண்ணிய தலங்களில் சிறப்பானவை காசி, பிரயாகை, ஹரித்துவார். பிரயாகை தான் தற்போதைய "அலகாபாத்'. இங்கு யமுனைநதி கங்கையோடு கலக்கிறது. அலகாபாத் அருகில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றும் சேரும் "திரிவேணிசங்கமம்' புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. திருப்பாவையில் "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயபெருநீர் யமுனைத் துறைவனை' என்று கண்ணபிரானின் சிறப்பை யமுனை நதியோடு இணைத்து, ஆண்டாள் குறிப்பிடுகிறாள். யமுனைக்கரையில் அமர்ந்து சொல்லும் காயத்ரி ஜபத்திற்கு விசேஷபலன் உண்டு. இங்கு சரஸ்வதி "அந்தர்வாகினி'யாக (கண்ணுக்கு தெரியாமல் மறைவாக இருக்கும் நதி) ஓடுகிறது. திரிவேணி சங்கமத்தை "தீர்த்தங்களின் ராஜா' என்று குறிப்பிடுவர். இங்கு வெண்ணிற கங்கையும், கருமை நிற யமுனையும் கலப்பதைக் காணமுடியும். பிரம்மாயாகம் செய்த தலம் என்பதால் "பிரயாகை' என்றபெயர் உண்டானது.
Tuesday 26 September 2017
தீர்த்தங்களின் ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment