Wednesday 29 November 2017

நகை பிரச்னையால் திருமணத்தடையா ?


சிதம்பரம் அருகிலுள்ள சிவபுரி உச்சிநாதேஸ்வரர் கோயிலின் புராணப்பெயர் திருநெல்வாயில். ஒருசமயம், திருஞானசம்பந்தர் தனது தொண்டர்களுடன் இவ்வூர் வழியாக ஆச்சாள்புரம் சென்றார். கடும் வெயில் அடித்த உச்சிப்பொழுது அது. பசியோடு இருந்த தனது பக்தர்கள் சாப்பிட வேண்டுமென்று எண்ணிய சிவபெருமான், மாறு வேடத்தில் வந்து, உணவு பரிமாறினார். உச்சிவேளையில் உணவருளிய நாதர் என்பதால் "உச்சிநாதேஸ்வரர் எனப்பட்டார்'. இவர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். லிங்கத்தின் பின்புறம் பார்வதி பரமேஸ்வரர் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளது. நகைப் பிரச்னை காரணமாக திருமணம் தடைபட்டால், இங்குள்ள கனகாம்பிகையிடம் வேண்டுதல் வைக்கலாம்."கனகம்' என்றால் "தங்கம்'.

No comments:

Post a Comment