Tuesday 28 November 2017

நன்றாக படிக்க இங்கே போங்க


ராமனின் குருவான வசிஷ்டர், ஞானம் பெற ஆர்வம் கொண்டு பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரது விருப்பத்தை அறிந்த பிரம்மன், ஒரே ஒரு தர்மம் செய்தால், பலன் பத்தாக பெருகும் தலம் பூலோகத்தில் உள்ளது. அங்கு சென்றால் ஞானம் கிடைக்கும் என்றார். அந்தத் தலமே மயிலாடுதுறை அருகிலுள்ள தலைஞாயிறு. பிரம்மாவின் அறிவுரையை ஏற்ற வசிஷ்டர், அங்கு சென்று சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜை செய்து ஞானம் பெற்றார். இத்தல இறைவனின் மகிமையை அறிந்த இந்திரன், அத்தலம் வந்து தான் செய்த ஒரு குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். அவனது பாவம் தீர்ந்தது. இதனால் இறைவனுக்கு, "குற்றம் பொறுத்த நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு சென்று வந்தால் படிப்பில் பின்தங்கிய குழந்தைகள் சிறப்பாக படிப்பர் என்பது ஐதீகம். குழந்தைகளின் கல்விக்காக சம்பந்தர் பாடிய தேவாரத்தை இங்கு பாடலாம்.

No comments:

Post a Comment