
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகிலுள்ள கொல்லிமலை அடிவாரத்தில் பழநியப்பர் (முருகன்) கோயில் உள்ளது. இங்கு முருகன் வேடனைப் போல தலையில் கொண்டையும், வேங்கைமலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடியிருக்கிறார். காலில் செருப்பும், வீரதண்டையும் உள்ளது. இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், கையில் சக்திஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் இடம்பெற்றுள்ளது. இவரை வழிபடுபவர்களுக்கு "நான்' என்ற ஆணவம் நீங்கிவிடும். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகில் கொல்லிமலை உள்ளது.
No comments:
Post a Comment