Wednesday 29 November 2017

லிங்கம் வடித்த அசுரன்


கம்சனின் நண்பனான பாணாசுரன், சிவனை நினைத்து தவத்தில் ஆழ்ந்தான். நேரில் காட்சியளித்த அவரிடம், ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகளைப் பெற்றான். தினமும் ஆயிரம் சிவலிங்கங்களை பூஜித்தான். ஸ்ரீசைலம், கங்கைக்கரை, நேபாளம், யமுனை போன்ற புண்ணிய தலங்களில் பதினான்கு கோடி சிவலிங்கங்களைப் பிரதிஷ்டைசெய்தான். கம்சனுக்கு நண்பனான இவனுடன் கிருஷ்ணர் போர் புரிந்தார். சிவபூஜை செய்த இருகைகள் தவிர மற்ற கைகளை வெட்டி வீழ்த்தினார். ஆனாலும், சிவபூஜையின் பலனால் கைலாயத்தை அடைந்தான். அங்கே குடமுழா என்னும் வாத்தியத்தை முழக்கும் பணியில் ஈடுபட்டான். பாணாசுரன் பிரதிஷ்டை செய்த லிங்கங்களை பாணலிங்கம் என்று குறிப்பிடுவர்.

No comments:

Post a Comment