Wednesday 29 November 2017

மங்களமும் மந்திரமும்


ஒருசமயம், உலகம் அழிந்த காலத்தில் வெள்ளத்தில் மிதந்த அமிர்த கலசத்தை உடைக்க வந்தார் சிவன். அவர், கும்பகோணத்தில் லிங்க உருவில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டதை அறிந்த பார்வதி அங்கு வந்தாள். மகாமக குளத்தில் நீராடினாள். அம்பிகையை தன் இடப்பாகத்தில் அமரும் படி அருள்புரிந்தார் சிவன். அவளுக்கு மங்களாம்பிகை என்ற பெயர் வந்தது. சக்திபீடங்களில் இது மங்களபீடம், மந்திரபீடம் என்று பெயர் பெறுகிறது. "மங்களம்' என்றால் "ஆக்குவது'. "மந்திரம்' என்றால் "காப்பது'. ஆக்குபவளும் அவளே, காப்பவளும் அவளே. இந்த அம்பிகையை மாசிமகத்தன்று வழிபட்டவர்க்கு எதையும் ஆக்கும் சக்தியும், ஆக்கியதைப் பாதுகாக்கும் திறனும் உண்டாகும்.

No comments:

Post a Comment