Monday 27 November 2017

அன்றே நடந்த காதலர் தினம்


காதலர் தினம் என்பது இன்று நேற்றல்ல. சங்க காலத்திலேயே இருந்துள்ளது. சங்க இலக்கியத்தில் "மடலேறுதல்' என்ற வகையுண்டு. காதலித்தவளை அடைய முடியாத காதலன், தன் மனநிலையை ஊரறியச் செய்ய, காதலியின் உருவம் வரைந்த கொடியை கையில் தாங்கியபடி ஊரை வலம் வருவான். "இவள் தான் என்னைக் கைவிட்ட இரக்கமற்றவள்' என்று கண்ணீர் சிந்துவான். இதுபோல, திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகவும், திருமாலைத் தன் காதலனாகவும் கருதி, சிறிய திருமடல், பெரியதிருமடல் என்னும் பாடல்களை உருகி உருகி எழுதியுள்ளார். இப்பாடல்களில் பல திவ்யதேசங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

No comments:

Post a Comment