Monday 27 November 2017

காட்டுக்குள் கடவுள்


தீர்க்க ரோம மகரிஷி தலைமையில்12 ஆண்டுகள் சத்திரவேள்வி செய்ய முனிவர்கள் விரும்பினர். வேள்வி நடத்தும் இடம் தெய்வாம்சம் மிக்கதாக இருக்க வேண்டும் என எண்ணி பிரம்மாவின் உதவியை நாடினர். அனைவரையும் ஒரு விமானத்தில் ஏற்றி, ""இதில் பூலோகத்தைச் சுற்றி வாருங்கள். விமானத்தின் சக்கரம் எங்கு விழுகிறதோ அதுவே வேள்வி நடத்த தகுதியான இடம்,'' என்றார். அதன் படி ரிஷிகள் சென்றபோது, விமானச் சக்கரம் ஒரு வனப்பகுதியில் விழுந்தது. அதுவே நைமிசாரண்யம். "நேமி' என்றால் "சக்கரம்'. "ஆரண்யம்' என்றால் "காடு'. இங்கு ரிஷிகள் செய்த சத்திரவேள்வியின் பயனாக விஷ்ணு யாக குண்டத்தில் தோன்றி, எல்லாருக்கும் மோட்சகதி வழங்கினார். மேற்குவங்க மாநிலத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மரங்கள் அடர்ந்த வனப்பகுதியையே விஷ்ணுவாக வழிபடுகின்றனர்.

No comments:

Post a Comment