Thursday 30 November 2017

மாலையில் சாப்பிடாதீர்


"கருக்கல் வேளை வந்திருச்சு! சாப்பிடாதே, வாசல்படியில் உட்காராதே'' என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் தெரியுமா?

மாலை 6 மணிக்கு தான், நரசிம்மரால் வதம் செய்யப்பட்டான் இரணியன். என்னை வான மண்டத்திலோ, பூமியில் நல்ல இடங்களில் வைத்தோ கொல்ல முடியாது என்ற வரத்தை அவன் பெற்றிருந்தான். எனவே இரண்டும் கெட்டானாக வாசல்படிக்கு தூக்கி வந்து அமர்ந்த நரசிம்மர், வயிற்றைக் கிழித்து குடலைச் சாப்பிட்டார். சர்வ சாதுவான ஸ்ரீமன்நாராயணனே, இப்படி செய்கிறார் என்றால், அவருக்கு அவன் மீது எவ்வளவு கோபம் இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இந்த காரணத்தால், மாலையில் சாப்பிடும் உணவு நரமாமிசத்துக்கு சமமாகக் கருதப்படுகிறது. வாசல்படியில் உட்கார்ந்தால் ஆயுள் குறையும் என்பதும் ஒரு கருத்து. வாசல்படிக்கு மேலே பல்லி உள்ளிட்ட ஜந்துக்கள் அலையும். அவை நம் மேல் விழுந்து ரோகம் வந்துவிடக்கூடாது என்றும் சொல்வார்கள்.

No comments:

Post a Comment