Thursday 30 November 2017

பரசுராமர் தோற்ற காரணம்


விஷ்ணுவின் தசாவதாரங்களில் அதிகம் பேசப்படாதது பரசுராம அவதாரம். தந்தையின் சொல்லை ஏற்று தாயையே கொன்றார் என்ற அளவில் தான் அவரைத் தெரியும். இது சிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அந்த அவதாரத்தை பக்தர்கள் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அந்த அவதாரம் தான் ராவணனின் அழிவுக்கு காரணமாக அமைந்தது. உலகிலேயே இரண்டு வில்கள் தான் பலம் மிக்கவை. ஒன்று சிவதனுசு, மற்றொன்று விஷ்ணு தனுசு. சீதையைத் திருமணம் செய்வதற்காக வைத்த போட்டியில், சிவதனுசுவை ராமர் உடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. விஷ்ணு தனுசு பரசுராமர் வசமிருந்தது. அவர் அரசர்களுக்கு எதிரான நிலையை எடுத்தவர். தன்னிடமுள்ள வில், எப்படியாவது ராமனிடம் போய் சேர வேண்டும், ராவணன் அழிந்தாக வேண்டும் என்பதால், ராமனை வலுச்சண்டைக்கு இழுத்தார். அதில் தோற்றது போல் பாவனை செய்து, விஷ்ணு தனுசுவை ராமருக்குக் கொடுத்தார். பின் துறவியாக மாறிவிட்டார். விஷ்ணு தனுசைக்கொண்டே ராவணனை ராமன் அழித்தார்.

No comments:

Post a Comment