Wednesday 14 March 2018

அள்ளித் தரும் குள்ளசுவாமி


அஸ்வமேத யாகம் நடத்திய மகாபலி சக்கரவர்த்தியிடம் தானம் பெற, மகாவிஷ்ணுவே குள்ள வடிவில் வாமனராக எழுந்தருளினார். தன் காலால் அளந்தபடி மூன்று அடி நிலத்தை தானமாக கேட்ட வாமனர், மகாபலியின்ஆணவத்தை போக்க, உலகளந்த பெருமாளாக உருவெடுத்தார். வந்திருப்பவர் விஷ்ணு என்பதை உணர்ந்த மகாபலி, அவரின் திருவடியில் சரணடைந்தான். அவனுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த வாமனர், சிரஞ்சீவியாக வாழும் பாக்கியத்தை வழங்கினார். 

வாமனரை மனதில் தியானித்து, 'ஓம் ஸ்ரீவாமன மூர்த்தியே நமஹ' என்று 108 முறை தினமும் ஜெபித்தால் கிரகதோஷம் நீங்கும். வாழ்வில் வளம் கொழிக்கும். 

No comments:

Post a Comment