Sunday 18 March 2018

சப்த சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள்

சப்த சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள்

ராமாயண காலத்தில், ராமரின் சிறந்த சேவகனாக இருந்து அவரது அன்பைப் பெற்றவர் அனுமன். இவர் சீதையைத் தேடி இலங்கைக்கு சென்றபோது, அங்குள்ள அசோகவனத்தில் அவரைக் கண்டார். அப்போது சீதையால் எப்போதும் சிரஞ்சீவியாக இருக்கும்படி வரம்பெற்றவர் அனுமன். இவரைப் போல் மேலும் 6 பேர் சிரஞ்சீவி வரம் பெற்றவர்கள். இந்த ஏழு பேரும் சப்த சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இதே போல் சப்த ரிஷிகள், சப்த நதிகளும் இருக்கின்றன.

சப்த சஞ்சீவிகள்:- அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமர்.

சப்த நதிகள்:- கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி.

சப்த ரிஷிகள்:- அகத்தியர், காசியபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர்.

No comments:

Post a Comment