ராமாயண காலத்தில், ராமரின் சிறந்த சேவகனாக இருந்து அவரது அன்பைப் பெற்றவர் அனுமன். இவர் சீதையைத் தேடி இலங்கைக்கு சென்றபோது, அங்குள்ள அசோகவனத்தில் அவரைக் கண்டார். அப்போது சீதையால் எப்போதும் சிரஞ்சீவியாக இருக்கும்படி வரம்பெற்றவர் அனுமன். இவரைப் போல் மேலும் 6 பேர் சிரஞ்சீவி வரம் பெற்றவர்கள். இந்த ஏழு பேரும் சப்த சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இதே போல் சப்த ரிஷிகள், சப்த நதிகளும் இருக்கின்றன.
சப்த சஞ்சீவிகள்:- அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமர்.
சப்த நதிகள்:- கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி.
சப்த ரிஷிகள்:- அகத்தியர், காசியபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர்.
No comments:
Post a Comment