தட்சன் என்பவனுக்கு மகளாகப் பிறந்ததால், பார்வதிதேவிக்கு "தாட்சாயணி' என்ற பெயர் உண்டு. அவன் அவளை சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தான். மருமகனுக்கு மதிப்பளிப்பது உலக இயல்பு. அதிலும், தனது மருமகன் இறைவன் என்பதால் அதீத மதிப்பளித்திருக்க வேண்டும். ஆனால், தட்சனா, மருமகன் தனக்கு மதிப்பளிக்க வேண்டுமென விரும்பினான். இதனால் அவனுக்கு பார்வதிதேவி "சிவேதரன்' என்று பெயர் வைத்தாள். "சிவனுக்கு இதரன்' என்று இதைப் பிரிக்கலாம். "சிவ' என்றால் "மங்களம்'. "மங்களத்துக்கு இதரன்' என்றால் "மங்கள குணங்களுக்கு எதிரானவன்' என்று தந்தைக்கே பெயர் சூட்ட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானாள். தந்தையே தனக்கு எதிராகத் திரும்பியதால் தன் தந்தையின் பெயரால் ஏற்பட்ட "தாட்சாயணி' என்ற பெயர் தனக்கு தண்டனை தரப்பட்டது போல உணர்ந்தாள் அவள். எனவே, தன் தந்தைக்கு தட்சன் என்ற பெயரை மாற்றி, "சிவேதரன்' என்று பெயரைச் சூட்டிவிட்டாள். பாகவதம் ஸ்லோகம் ஒன்றில் தாட்சாயணியின் கதையும், "சிவேதர' என்ற வார்த்தையும் வருகிறது.
Saturday 16 September 2017
தந்தையின் பெயரை மாற்றிய மகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment