Sunday 4 March 2018

குழந்தைகளுக்கு படிப்பு


பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு நெல்லாலும், படிப்பவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பூவாலும் நாக்கில் எழுதும் வழிபாடு, கும்பகோணம் அருகிலுள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலில் தினமும் நடக்கிறது. பேசத் தயங்கும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்தால், பேசும் திறன் உண்டாகும்.

திருமணம் தடைபடும் பெண்கள், இங்குள்ள 'நித்திய கல்யாணி' அம்மனையும், திருமணம் வேண்டாமென தனித்து வாழ விரும்புபவர்கள் 'சுகந்த குந்தல அம்பாளையும் வழிபடலாம். கும்பகோணம்- சுவாமிமலை செல்லும் சாலையிலுள்ள புளியஞ்சேரியில் இருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது.

No comments:

Post a Comment