நவராத்திரி நாட்களில் தினமும் அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அன்னையை நவ கன்னிகையாகவும், சில இடங்களில் நவ துர்க்கையாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.
10 வயது நிரம்பாத கன்னிகையாக நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு. அது போல பார்வதிதேவியின் பல்வேறு நிலைகளில் அம்பாளை, துர்க்கையாக கருதி வழிபாட்டை செய்வது நவதுர்க்கை வழிபாடு என்று அழைக்கப்படுகிறது.
முதல் நாள் – ஷைலபுத்ரி
இரண்டாம் நாள் – பிரம்மசாரிணி
மூன்றாம் நாள் – சந்தரகாந்தா
நான்காம் நாள் – கூஷ்மாண்டா
ஐந்தாம் நாள் – ஸ்கந்த மாதா
ஆறாம் நாள் – காத்யாயனி
ஏழாம் நாள் – காலராத்ரி
எட்டாம் நாள் – மஹா கவுரி
ஒன்பதாம் நாள் – சித்திதாத்ரி
என்று ஒன்பது நாட்களும் நவ துர்க்கை வழிபாடு செய்வது சிறப்பு தரும்.
No comments:
Post a Comment